வெள்ளி, 28 மார்ச், 2014

தி. மு.க வின் தேர்தல் அறிக்கை



நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை யொட்டி தி.மு.க. வெளியிட்டுள்ள நூறு அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கை என்பது வரலாற்றுப் பெட்டகம்!

அரசியலில் ஈடுபடும் ஒரு திராவிட இயக்கம் - தன் விழுமிய வேர்களை மறந்து விடாமல், அதன் சித்தாந்தங்கள் - கோட்பாடுகளின் அடிப்படையில் இதைவிடச் சிறப்பாகத் தீட்டப்பட முடியாது என்று கூறும் வகையில், இந்தத் தேர்தல் அறிக்கை செப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது  என்றே சொல்ல வேண்டும்.

நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் தேவை என்று எதிர்பார்க்கப்படும் தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் குறித்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பேசுகிறது.
தேர்தல் அறிக்கையின் முன்னுரையே - நூறு அம்சத் திட்டத்தின் முகப்படாமாக - முத்திரையடியாக ஜொலிக்கிறது!


  • முழு ஜாதிவாரி கணக்கெடுப்பு.



  • மகளிருக்கு 33ரூ நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இடஒதுக்கீடு.



  • நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்.



  • அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம்.



  • மத்திய நிதிநிலை அறிக்கையில் 10 விழுக்காடு நிதி குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகளுக்கு ஒதுக்கீடு.



  • திருநங்கைகளுக்கு தேசிய அளவில் மாற்றுப் பாலின அங்கீகாரம்.



  • சிறுபான்மையினருக்கு நலம் பயக்கும் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துதல்.



  • அகில இந்திய அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (ஆக்ஷஊ) தனி  ஒதுக்கீடு.



  • தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு ஸமழு இலவசக் கல்வி.
  • தாழ்த்தப்பட்டோர் வீட்டு வசதி வாரியம்.

  • நெசவாளர் நலன்கருதி அவர்களுக்கான கலால்வரி, சிட்டா நூல் வரிகள் நீக்கம்.

  • வேலைதேடி வெளிநாடு செல்வோர் நலன்கருதி இந்திய தூதரகங்களில் தனிப்பிரிவு.

  • தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தூதர்களாக தமிழர்களையே நியமிக்க வலியுறுத்தல். 
  • தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினம், மகேந்திரகிரி பகுதிகளில் வேலை வாய்ப்பளிக்கும் திட்டங்கள்.

  • தமிழக மீனவர்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம்.

  • தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாகவும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் தமிழ்.



  • நதிகள் தேசிய மயமாக்கல் மற்றும் இணைப்பு.



  • மத்திய அரசு வரியில் 60 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்தல்.

கல்விக் கடன்கள் முழுமையும் தள்ளுபடி.

  • தொழிலாளர் நலத்திட்டங்களைக் கண்காணிக்க தேசிய கண்காணிப்பு ஆணையம்.



  • இந்திய அளவில் 10 இலட்சம் பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு.

  • பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கல்வி மாற்றம்.

  • விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளிக்க மாநிலங்களுங்கு உரிமை.

புதன், 26 மார்ச், 2014

தி.மு.கழகம் பங்கேற்ற பத்தாண்டுகால மத்திய அரசில் தமிழகம் பெற்ற பயன்கள்!



அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க. பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான்  தமிழ்,  செம்மொழி என்ற தகுதியைப்பெற்றது;

சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்தது,

கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம்  56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச்செலவில்,  4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில்,  3,276 கிலோ மீட்டர் சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக மேம்பாடு;  மிகப்பெரிய மேம்பாலங்கள்,  துறைமுக விரிவாக்கப்பணிகள், சரக்குப்பெட்டக முனையங்கள்,  நீர்வழிப் போக்கு வரத்து வசதிகள் அமைந்தன. ஃ சென்னைக்கருகில் ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி  உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் அமைத்தது.


1553 கோடி ரூபாய்ச்செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.


120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு.

1650 கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.
2427 கோடி ரூபாய் செலவில் சேது சமுத்திரத்திட்டப்பணிகள் தொடக்கம்.

நெசவாளர் சமுதாயத்தினர் பெரும் பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.

பொடா சட்டம் ரத்து.

அனைத்து கிராமங்களிலும் முழு  கணினி நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய கணினி நிர்வாகத் திட்டம் அறிமுகம்.

30 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி.

மாதம் ஒன்றுக்கு 120 இலட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள்.

செல்போன் கட்டணங்கள் குறைப்பு.

தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

சென்னைக்கருகில் பன்னாட்டுத்தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்.
 ஃ திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.

திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்.

ஆசியாவிலேயே  முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம்.

சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.),

இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன் அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசில் இடம் பெற்ற தமிழகத்தின் 13 அமைச்சர்களும் பல்வேறு செயல் திட்டங் களை இந்தியாவின் பொருளாதார வளர்ச் சிக்காகவும், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் நிறைவேற்றி உள்ளனர். இந்திய அளவில் கடந்த காலங்களில் பெறமுடியாத அளவிற்குத் திட்டங்களின் மொத்த செலவுத் தொகையான ரூ. 3,70,000 கோடியில், தமிழ்நாடு 11 விழுக்காட்டுப் பங்கினைப் பெற்றுள்ளது. இதுவரை தமிழ்நாடு பெறாத அளவுக்கு அதிக நிதியினைப்பெற்று தமிழ்நாட்டில் 69 மத்திய அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.