செவ்வாய், 16 நவம்பர், 2010

மண் குதிரையை நம்பி...


        அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அண்மையில் அளித்த பேட்டி அவரின் உண்மையான உருவத்தைத் தனக்குத்தானே வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
           காங்கிரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவினை அளிக்க முன்வந்துவிட்டார். காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பதாகையைப் பிடித்துக்கொண்டு அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகளுக்கு இதன்மூலம் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. தன்னை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விடுவது என்பது ஜெயலலிதா அம்மையாருக்குக் கைவந்த கலையாகும்.
    ஜெயலலிதா அளித்த அந்தப் பேட்டியைப் பார்த்த, படித்த அத்தனைப் பேர்களின் கவனத் துக்கு உடனடியாக வந்தவர்கள் இடதுசாரிகள் தான்.
இந்த வெளிப்படையான பேட்டிக்குப் பிறகு இடதுசாரிகளின் நிலை என்ன? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
நான்கு நாள்கள் கடந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமது அதிருப்தியைத் தெரி வித்துள்ளது.
        அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரவேண்டு மானால், காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணிபற்றி அய்யந்திரிபற தெரிவிக்கப்பட்டாகவேண்டும் என்ற தொனி சி.பி.எம். கட்சியின் அறிக்கையில் காணப்படவில்லை.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இதற்குப் பிறகும் காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டணி ஜெயலலிதா தலைமையில் உள்ளதுதான் என்ற எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
இடதுசாரிகள் காங்கிரசை எதிர்ப்பதற்கும், ம.தி.மு.க. காங்கிரசை எதிர்ப்பதற்கும் அடிப் படையில் வேறுபாடு உண்டு. ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசின் போக்கினை எதிர்ப்பது என்பது அதன் முக்கிய நோக்கமாகும்.
  இப்பொழுது இடதுசாரிகளுக்கு ஜெயலலிதா கொடுத்த நெருக்கடியைப்போல - நாடாளுமன்றத் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக விடுதலைப்புலிகள் பற்றியும், ஈழத் தமிழர்கள் பற்றியும் அங்கு சிங்கள அரசு மேற்கொண்ட கண்மூடித்தனமான இன அழிப்புப் பற்றியும் தெரிவித்த கருத்து ம.தி.மு.க.வைப் பெரும் நெருக் கடிக்கு உட்படுத்தியது.
கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே!
 ஜெயலலிதா பதில்: அங்கு ஈழம் இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியாக, அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக் கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல் லப்படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால்,இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் -விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். (நமது எம்.ஜி.ஆர்., 18.1.2009) என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு விட்டார். ம.தி.மு.க. உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத் தியின் கதியை அடைந்தது.
இப்படி தன்னை நம்பி கூட்டு வைத்துள்ள வர்களை அவமானப்படுத்துவது - அவர்களைச் சற்றும் பொருட்படுத்தாத்தனம் என்பது ஜெயலலிதாதவுக்குச் சர்வசாதாரணமாகும்.
பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துக்கொண்டி ருந்தபோதும், அதே நிலைதான்; ஜெயலலிதாவோடு கூட்டு வைத்திருந்த அந்தக் காலம் தமது நிம்மதி குலைந்த காலம் என்று வாஜ்பேயியே பேட்டி அளித்தார் என்பதும் நினைவூட்டத்தக்கதாகும்.
ஜெயலலிதாவை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான் என்பதைக் காலம் கடந்தாவது கூட்டணிக் கட்சியினர் உணர்வார்களாக!
விடுதலை-தலையங்கம்-15-11-2010

தமிழர் தலைவர் அறிக்கை

மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள் பதவி விலகியது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


  நேற்றிரவு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா பதவி விலகினார் என்பது செய்தி.
செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்ற தத்துவப் பழமொழிக்கு தன்னேரில்லா உவமையான தகைமையாளர்.
சந்தையைப்போல் ஆக்கிய நாடாளுமன்றத்தினை நடத்திட இப்படி ஒரு கடும்விலையா,பலிகடாவா என்று பண்புள்ளங்கள் நாடெங்கும் கேட்கக்கூடும்! பக்தர்களின் பாவ மன்னிப்புக்காக கடவுள், கடவுளச்சி களின் முன் பலியிட்டு ரத்தக் காணிக்கை கொடுத்து, பூசாரிகளும் அப்பாவி பக்தர் களும் மகிழ்வதில்லையா - அதுபோன்ற டில்லிக் காட்சி ஒன்று இது!
அமைச்சர் ஆ. இராசா பின்பற்றிய நடைமுறை
1999 ஆம் ஆண்டு முதலே இருந்த நடை முறையைத்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை யிலும் அமைச்சர் ஆ. இராசா பின்பற்றினார்.
கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவைத் தத்துவப்படி, அவர் மட்டும்தான் குற்றம் இழைத்தவரா -குற்றம் என்று ஒன்று நடந்திருக்குமானால் - அரசின் அடுத்தகட்ட நிலைப்பாடு, செயற்பாடு என்று எதிர்க்கட்சி கள் மேலும் சில காவுகளைக் கேட்க மாட்டார்களா என்ற கேள்வி, மில்லியன் டாலர் கேள்வியாகக் கிளம்பாதா?
இதுவரை உலகம் கேள்விப்படாத ஒன்று விசித்திரம்! ஓர் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்குமுன்பே, அது பற்றிய விமர்சனம், பதவி விடுவிப்பு என்றால் அதைவிட வேறு விசித்திரம் உண்டா?
பூமராங்போல திரும்பாதா?
ஷேக்ஸ்பியரின் வெனீஸ் நகரத்து வியாபாரி (கூந ஆநசஉயவே டிக ஏநஉந) நாட கத்தில், ஷைலக் கேட்ட ஒரு பவுண்ட் சதை - ரத்தம் சிந்தாமல் எடுக் கப்பட்டு தரப்படவேண் டும் என்று கேட்டபோது, புரிந்துகொண்ட நீதிபதி எவ்வாறு தீர்ப்பளித்தார்?
இங்கே...? நாளைக்கு இது எந்தக் கூட்டணிக்கும், ஆளும் கட்சிக்கும் எதிராக பூமராங்போல திரும்ப ஒரு தவறான முன்னுதாரணமாகிவிட்டது.
தலைமைக்குக் கீழ்ப்படியும் முதல் தொண்டர் ஆ.இராசா
ஏற்கெனவே நடந்த மற்ற பதவி விலகல்கள் யூகம், கசிவு அடிப்படையில் நடைபெறவில்லை! எனவே, அவற்றை இதனுடன் ஒப்பிட முடியாது!
ஆ. இராசா தலைமைக்குக் கீழ்ப்படியும் முதல் தொண்டர்; எனவே, அவர், தான் வீழ்ந்தாலும் தனது கட்சிக்கும், தலைமைக்கும், மத்திய ஆட்சிக்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்கு ராஜினாமாவை வலியச் சென்று அளித்து, வான்புகழ் கொண்டுவிட்டார்!
மண்டல் ஆணையத்திற்காக வி.பி. சிங்கை - குற்றமற்றவரை பிரதமர் பதவியிலிருந்து விலக வைத்த அந்தக் கூட்டம்தான் இராசாவை நோக்கி தங்களது துப்பாக்கிகளை நீட்டிய கூட்டம் - மண்டல் ஆணையத்தின் அமலாக் கத்தைத் தடுக்க முடிந்ததா?
பதவியோடு பிறந்ததல்ல தி.மு.க.; பதவியோடு பிறந்தவரல்லர் நமது மானமிகு இராசா. தன்மானம் தழைத்தோங்க தரணியில் தந்தை பெரியாரிட மிருந்து முளைத்த பலம் குன்றா சுயமரியாதைக் கொள்கை விழுது அது!
மாண்புமிகு ஆ.இராசா மானமிகுவானார்
இதனை அரசியலால் - நாளைக்கொரு கூட்டணி, ஆளுக்கொரு வேஷம் போடுபவர் களால் வீழ்த்திவிட முடியாது.
அறத்திற்கும், அரசியலுக்கும் உள்ள தூரம் அளக்க முடியாததுதான். உள்ள ஆழம் கணக்கிட முடியாததுதான்!
மாண்புமிகு இராசா, மானமிகுவாகியுள்ளது பெருமையே!
மாண்புமிகுவைப் பறிக்கலாம் எவரும் - மானமிகுவை எவராலும் பறிக்கவே முடியாது - மரணம் ஒன்றைத் தவிர!
இராசா இதன்மூலம் வெற்றி வீரராகி ராஜ நடைபோட்டு வருவார். அவருக்கு வரலாறு காணா வரவேற்பு தர தமிழ்நாடு காத்திருக்கிறது -
காத்திருக்கிறார்கள் கருஞ்சிறுத்தைகள்!
பதவி அரசியல் வரலாறு தெரியாதவர்கள் அல்லர் மக்கள்.
முன்பு முந்திரா ஊழலில் சிக்கிய டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் அதை விசாரித்த நீதிபதி எம்.சி. சுக்லாவும் ஒரே நேரத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற (நேரு காலத்தில்) காங்கிரஸ் கலாச்சாரம்பற்றி எதிர்க் கட்சியினரின் பேச்சு நாடாளுமன்ற பழைய குறிப்புகளில் பதிவாகி உள்ளது என்பது வரலாறு.
யாருக்கு வெற்றி?
இதில் யாருக்கு வெற்றி என்ற கேள்வி எழலாம். போட்ட தீனிக்குப் பலன் ஏற்பட்டு விட்டது என்ற பெருமுதலாளித்துவ திமிங் கலங்கள் புன்னகை புரிகின்றனவே அவர் களுக்குத்தான்!
ஜனநாயகம் என்ற பெயரில் கூச்சல் நாடாளுமன்ற நடப்பு என்ற தன்மையில் இன் னமும் என்னென்ன கூத்துக்கள் அரங் கேறுமோ - பொறுத்திருந்து பார்ப்போமாக!
தலைவர்,
திராவிடர் கழகம்

புதிய மனுநீதியோ!


அகில இந்திய அளவில் உள்ள பார்ப்பன ஊடகங் கள் பற்றி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி பேட்டியில் (15.11.2010) தெளிவாகக் கூறினார்.
தி.மு.க. அரசின் சமுதாய சீர்திருத்தக் கொள்கை கள், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பாதையில் செல்லுவதைப் பொறுக்கமாட்டாத பார்ப்பன சக்திகள், ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் மத்திய அமைச்சர் ஆ.இராசாமீது பாணம் தொடுத்துள்ளன.
2 ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் இராசா அவர்கள் புதிதாக எந்த ஒரு கொள்கையையும் வகுத்துச் செயல்படுத்திடவில்லை. ஏற்கெனவேயிருந்த நடைமுறையைத்தான் கடைப்பிடித்திருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் எதிரிக்கட்சியாகி விட்டவர்கள் சற்றும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
இதற்கு முன்பு பிரமோத் மகாஜன், அருண்ஷோரி காலத்தில் ஏற்பட்ட நட்டம் பற்றியும் இந்தியத் தலைமைக் கணக்காயர் அறிக்கையில் கூறியுள்ளதே-அதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கும் நாணயமான பதில்-இராசாவை பதவி நீக்கம் செய்யத் துடித்தோரிடமிருந்து வரவில்லையே!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ, இராசா பதவி விலகியே தீரவேண்டும். ஆடிட்டர் ஜென ரலே கூறிவிட்டார் என்று பூமிக்கும், வானத்திற்கும் தாவிக் குதிக்கிறார்களே-
இவர்களின் கேரள மாநிலக் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராய் விஜயன்மீது சாற்றப்பட்ட குற்றமென்ன?
1981இல் ஈ.கே.நாயனார் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது கனடா நாட்டின் லாவ்லின் நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஒன்று போட்டார். அந்த ஒப்பந்தத்தின் காரணமாக மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் கொஞ்சம்தான்- ஆமாம் ரூ.376 கோடி.
இதனை வெளிப்படுத்தியதும் கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்தான்.
அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி நடந்து கொண்டது? சி.பி.அய் விசாரிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதே (16.1.2007) சி.பி.அய்யும் விசாரணை செய்து ஊழலை உறுதி செய்ததே (21.1.2009)
அப்பொழுது சி.பி.எம். என்ன சொன்னது? அரசியல் தூண்டுதல் காரணமாக உள்நோக்கத்துடன் சி.பி.அய் இப்படிக் குற்றம் சாற்றியுள்ளது என்று கூறவில்லையா?
ம.தி.மு.க.வும் சேர்ந்துகொண்டு அமைச்சர் இராசா பதவி விலக வேண்டும் என்று கூறுகிறதே.
அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர் கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சாதாரணமான வையா? ஊழலைவிடக் கொடுமையானதாயிற்றே- மதச்சார்பற்ற தன்மைக்கே மரண குழி வெட்டியவர்கள் ஆயிற்றே.
இத்தகைய குற்றச்சாற்றுக்கு ஆளானவர்கள் அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா என்று நாடாளுமன் றத்தில் கடும் எதிர்ப்புப் புயல் வெடித்தது. அப்பொழுது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எப்படி நடந்துகொண்டார்?
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் பதவி விலகவேண்டும் என்று புரட்சிப்புயலாக வெடித் தெழுந்தாரா?
அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை அவர் வாயாலேயே கேட்போம். திருப்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க நிதியளிப்பு விழாப் பொதுக்கூட்டத்தில் (20.2.2001) இதோ வைகோ பேசுகிறார்: பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட-அத்வானி பதவி விலக வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் ஒன்பது நாள் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நான் டில்லியில் வீட்டி லிருந்தேன். காலை 9 மணிக்கு வாஜ்பேயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 10 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள் என்று பிரதமர் அழைத்தார். எதிர்க்கட்சிகள் பேசிய பிறகு அரசின் சார்பில் அருண் ஜேட்லி பதிலளிப்பார். அதற்கடுத்து நீங்கள் பதிலளித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிராளிகளின் வியூகத்தை எளிதில் உடைக்கக் கூடியவன் இந்த வைகோ என்ற நம்பிக்கையில் என்னிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்று பேசினாரே!
அமைச்சர் இராசா ஊழல் செய்தார் என்று குறிப்பிடப்படவில்லை - அவர் செயலால் அரசுக்கு நட்டம் ஏற்படும் என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளவர் பதவி விலக வேண்டும். அதே நேரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் மட்டும் பதவி விலகக் கூடாது-இதுதான் வைகோ அவர்களின் புதிய மனுதர்மம்!
அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று வந்துவிட்டால் ஆதிக்கவாதிகளுடன் கைகோத்துக் கொள்வது சரியானதுதானா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!
(விடுதலை - தலையங்கம்-16-11-2010)

ஞாயிறு, 14 நவம்பர், 2010

பெரியார் பேசுகிறார்

ஏன் வேண்டும் தி.மு.க. ஆட்சி?


எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியோடு, 93 ஆண்டு முடிவடைந்து, 94 ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றிவிட்டது.
93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், பிறைகளில் (அமாவாசைகளும் ) 1635 ஏற்பட்டு மறைந்துவிட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானம்தான் காண முடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்) முடியாத காரியமேயாகும்.
நினைத்தேன்-சொன்னேன்-
நடத்திக் காட்டினேன்
என் வாழ்நாளில் நான் மற்றவர்(அனேகர்) கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத்தாலும் வெளியில் சொல்லப் பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக்காட்ட முடியாதது மான காரியத்தை, எளிதாய் நினைத்து, வெளியில் எடுத்துச் சொல்லி(பிரசாரம் செய்து) காரியத்திலும் நடந்து வந்ததோடு, ஓரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும்படி-விளங்கும்படி, ஓரளவுக்கு நடத்திக் காட்டியும் வந்திருக்கிறேன்.
இந்த நிலை உலகெல்லாம் பரவவேண்டும் என்ற எண்ணம்கொண்டு அதற்காக வாழ்கிறேன் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வசக்தி என்பதாக எதுவும் இல்லை, மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய்வசக்தி-தெய்வீகத் தன்மை என்பதாக எதுவுமில்லை; அப்படிப் பட்ட தெய்வீகத்தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை; அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவுமே இல்லை என்றும் திண்ணமாய்க் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கிறேன்-வருகிறேன்.
மக்களுக்கு எந்தக் கெடுதியும் ஏற்படவில்லையே
இந்த எனது நிலையால், எனது 93 ஆண்டு வாழ் நாளில் எனக்கு யாதொரு குறைவும் சங்கடமும், மனக்குறைவோ, அதிருப்தியோ கூட ஏற்பட்டதே யில்லை. மேற்கண்ட எல்லா காரியங்களிலும், மற்ற வர்கள் எளிதில் பெறமுடியாத அநேக ஏற்றங்களை சாதாரணமாகப் பெற்றிருக்கிறேன்; மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும், விரும் பப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறேன்.
இதனால் உலகுக்கு-மக்களுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்பதோடு நாட்டுக்கும் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம்.
நோயும் சாவும் மட்டும் ஏராளம்
நமது கருத்து வெளியீடும், பிரசாரமும் துவக்கப்பட்ட காலத்தில், நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண்டேயாகும். கல்வியில் நமது மக்கள் 100க்கு 8 பேர், 10 பேர் என எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள்; அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்தி பேதி) வந்தால் 100-க்கு 90 பேர் சாவார்கள்; பிளேக் வந்தால் 100-க்கு 100-ம் சாவார்கள். இருமல்(க்ஷயம்) வந்தால் 100-க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100-க்கு 50 பேர்களுக்கு மேல் சாவார்கள். தொத்து நோய்களும் பல-குழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்பஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன.
அரசியலில் அந்நிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறை யிலும் பார்ப்பன மயமும், முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும், எஜமான்-அடிமைத்தன்மையும் இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வநிலையோ, ஒரு லட்சம் என்பதுதான் உயர்ந்த நிலை. 10 லட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ் வளவோ கீழ் நிலைக்கு ஆளாகியிருந்தது மாத்திரமல் லாமல், அந்நிலைபற்றி வெட்கப்படாமலும் கவலைப் படாமலும் வாழ்ந்து வந்தோம்.
எல்லாம் கடவுள் செயல்;
நம்மால் ஆவதில்லை
இப்படிப்பட்ட நிலையில், இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல்-இவற்றின் விளைவு பற்றி யாருமே கவலைப்படாமல். எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை- என்று கருதி, நிம்மதியுடன் மக்கள் இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள் தனமும் இதுவரை சிந்திக்காததுமேதான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும், முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்குப் புது எண்ணங்களை- அறிவை உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங்களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.
கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும் அழிக்கவும் ஒழிக்கப்படவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது; எப்படி வந்தது என்றால், மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக் காலமான சுமார் 2000-3000 ஆண்டு களுக்கு முந்தின மிருகப்பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல்; தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன் தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம். அவை மாத்திரமா பகுத்தறிவு, சிந்தனை அற்ற காலம்; வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.
எவ்வளவு காட்டுமிராண்டியாக இருந்திருப்பார்கள்?
சாதாரணமாகக் கந்த புராணம், வாயு புராணம், பாரத புராணம், இராமயண புராணம் முதலிய கடவுள் சம்பந்த மான, மத சம்பந்தமான, சாஸ்திர சம்பந்தமான சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம, திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் முதலிய ஆதாரங்களையும், இலக்கியங்களையும் பார்த்தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.
மற்றும் இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில், 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர் , வித்துவான், மகாமகோ பாத்தியாய, பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பட்டம் பெற்ற படிப்பாளி, அறிவாளிகள் என்பவர்களெல்லாம் கூட நம்பி, அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இதைக் காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையை நம்புவதும், நடிப்பதும் அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகியவைகளை ஏற்படுத்தி பரப்பி, கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக காட்டுமிராண்டி களாக இருந்திருக்க மாட்டார்கள்?
அந்தத் துணிவில் அதிசயம் ஏது?
அவ்வளவு ஏன், கிரகணங்களை நம்புகிறவர்கள் எத்தனை பேர் இன்று கூட சாதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு அப்பால் உலகம் இருப்பதாகவே தெரியாதோர் எத்தனை? இன்றைக்கு 150, 200, 300 ஆண்டுகளுக்கு முன் நம் நிலை என்ன என்று பார்ப்போமானால்-நெருப்புக்குச்சி ஏது ?ரயில், கார், கப்பல், ஆகாயக்கப்பல் ஏது? நடந்த நல்ல பாதை ஏது? இந்த நிலைமையில் உள்ள மக்களின் மூட-காட்டு மிராண்டி நம்பிக்கையான - அதன் தோற்றங்களான கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பவை களை ஒழிக்க ஒரு மனிதன் துணிவு கொள்ளுவானா னால், அத்துணிவில் அதிசயம் ஏது? எப்படியிருக்கு முடியும்?
பகுத்தறிவுள்ள மனிதனாக இருந்துகொண்டு, கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பன வாகியவைகளை நம்புவதும்; அழிக்காமல், ஒழிக்காமல் இருப்பதும், பின்பற்றுவதுமான, முட்டாள்தனமான, காட்டுமிராண்டித்தனமான துணிவு கொண்ட தன்மை யாகும் என்று சொல்லலாம்.
மூடனுக்கும் புரியாமல் போகாதே
நிற்க, மேலே கண்ட எனது துணிவான கருத்து களால், பிரசாரத்தால் இவ்வைம்பது ஆண்டுக்கப்பால் நம் நாட்டாருக்கு - மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன? கேடு என்ன என்று பார்த்தால், ஒரு சாதாரண மனிதனுக்கும், அவன் கடுகளவு சிந்தனையாளனாக இருந்தால் ஒன்றும் ஏற்படவில்லை என்பதோடு மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள் ஏற்பட்டிருப்பது தெரியாமல்போகாதே.
அது மாத்திரமா? இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கருத்து என்பவைகளால் நாட்டுக்கு-மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளும், வளர்ச்சித் தடைகளும் எப்படிப்பட்ட மூடனுக்கும் புரியாமல் போகாது. எனவே நான், 93 ஆண்டு வாழ்ந்ததை வீண்வாழ்வு என்று கருதவில்லை-என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை.
ஒரே ஒரு பயம்தான்; மற்றபடி மகிழ்ச்சியே
இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம்.
இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.
காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு-சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும்.
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்.
- ஈ.வெ.ராமசாமி
(தந்தை பெரியார் பிறந்த நாள்
விடுதலை மலர், 1972)

கி. வீரமணி வேண்டுகோள்!


          டெலிகாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்த மான ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை (சிஏஜி) ரூபாய் 1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்த அறிக்கை செய்தி அதிகார பூர்வமாக குடியரசு தலைவர் அலுவலகத்தினாலோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ அல்லது அரசில் இருந்தோ பத்திரிக்கைகுறிப்பாக (Press Communication) வெளிவராத நிலையில் இதை செய்தி ஊடகங்களுக்கு குறிப்பாக சில ஆங்கில தொலைக்காட்சி களுக்கு மற்றும் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளேடுகளுக்கு எப்படி வெளியாக்கப்பட்டது? அரசின் மிக முக்கிய இரகசிய அறிக்கை எப்படி வெளியானது? என்பது பற்றி அரசு சம்பந்தபட்டவர்கள் மீது அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமா? இது அதிகாரப்பூர்வமான தகவல்தான் என்று தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை தொடர்ந்து செய்தி யாளர்களும், ஊடகங்களும் அமைச்சர் ஆ.இராசா மீது பாய்ந்து அவரை பலிகடா ஆக்க வேண்டும் என்று முயற்சிப்பதற்கு என்ன பின்னணி? எப்படிப்பட்ட வட்டாரங்கள் இதில் மிகப்பெரிய அளவிற்கு பணச்செலவு உள்பட செய்து இதனை தொடர்ந்து செய்கிறார்கள் என்பதனை உடனடியாக ஆராய வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். சம்பந்தபட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய முயற்சிக்காமல் ராசாவைப் பற்றியே கேள்வி கேட்பதும்,பதில் சொல்வதும் தேவையற்ற சர்ச்சைகள் அல்லவா?
- கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சனி, 13 நவம்பர், 2010

பார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்!

கலி.பூங்குன்றன்,
 பொதுச் செயளாளர், திராவிடர் கழகம்


தமிழ்நாட்டில் பிறந்தும்; தமிழ்-மொழி பயின்றும்; தமிழரெனச் சொல்-லிக் கொண்ட போதிலும் தமிழ்-மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ஞானப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வ-தில்லை. அதனைத் தம் தாய் மொழி-யெனக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான் (திராவிட நாடு 2.11.1947) என்று மிகக் கச்சிதமாக சிறைபிடித்தது போல சித்திரம் தீட்டியவர் அறிஞர் அண்ணா.
சங்கராச்சாரியாக இருந்தாலும், சர்.சி.பி. ராமசாமி அய்யராகவிருந்-தாலும், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்-சாரியாராகவிருந்தாலும், சத்திய-மூர்த்தி அய்யராகவிருந்தாலும், தினமணி வைத்திய நாதய்யர்களாக இருந்தாலும் அண்ணா சொன்ன அச்-சுக்குள்தான் அகப்பட்டுக் கொள்-வார்கள்.
சமஸ்கிருத பாஷை பிரமத்திற்குச் சமானம் என்றார் மறைந்த சங்கராச்-சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (நூல்: ஞானவழி)
ஹிந்துவாக இருந்தாலும், முஸ்லீ-மாக இருந்தாலும் நமது பழைய பெருமைகளுக்கு திறவுகோல் சமஸ்-கிருதம் என்பது ராஜாஜியின் கணிப்பு (சென்னை லயோலா கல்லூரியில் 25.7.1937).
இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை _ அது சமஸ்கிருதம்தான் என்-கிறார். சர் சி.பி. ராமசாமி அய்யர் (உதகமண்டலத்தில் 5.6.1953).
என் கைக்குச் சர்வாதிகாரம் வந்தால் இந்தி மொழியோடு சமஸ்-கிருதத்தையும் கட்டாயப் பாட-மாக்குவேன் என்று சத்தியம் செய்-கிறார் சத்தியமூர்த்தி அய்யர்வாள் (மெயில் 25.7.1939) முதல் மூன்று பாரங்களில் மட்-டுமே ஹிந்தி கட்டாயம் இருப்பதால் அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக வேணும் வைக்கலாம்.
-_ ஆனந்தவிகடன் (17.10.1937)
இப்படி வரிசையாகவே சொல்லிக் கொண்டு போகலாம்.
இன்றைக்கு வடமொழி 26 எழுத்துகளை தமிழுக்குக் கொடுத்தும் தமிழிலிருந்து அய்ந்து எழுத்துகளை (எ,ஒ,ன,ற,ழ) பெற்றும் ஒருங்குறி (ஹிஸீவீநீஷீபீமீ) என்ற பெயரில் சமஸ்கிருதத்-துக்குப் புத்துயிர் கொடுத்து, ஏற்கெனவே தமிழைக் கெடுத்தது போதாது என்று புது முயற்சியில் தமிழில் கலப்படத்தை ஏற்படுத்தும் மகாசதியில் ஈடுபட்டுள்ளனர்.
சமஸ்கிருதத்தின் இந்தப் போக்குக் குறித்து பெரும் புலவரும், பார்ப்-பனருமான வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்), தமிழ் மொழியின் வரலாறு என்னும் தமது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்-பிடுகிறார்:
தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப்படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்தியமுனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங் கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென்பதும் பொருந்தாமை யறிக இனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழ வேண்டியது அவசியமாயிற்று. ஆரியர் தமிழும் தமிழர் சமஸ்கிருத-மும் பயிலப் புகுந்தனர். சமஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை வடமொழியென்று உரைப்-பாராயினர். அது வடமொழி-யென்னப்பட்டவுடனே தமிழ்மொழி தென்மொழியெனப்படுவதாயிற்று. தமிழரும், ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமைபற்றி அவ்விருவர் பாஷைகளும், சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. வடமொழி தமி-ழொடு மருவு முன்னே, அம்மொழி-யினின்றும் பாகத பாஷைகள் பலகிளைத்துத் தனித்தனி பிரிந்தன. இதற்கிடையிலே தான் தமிழ் மொழி-யினின்று தெலுங்கு மலையாளம் கன்னடந் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன.
இவ்வழி மொழிகளிலே தெலுங்-குதான் வடமொழியொடு மிகவுங் கலந்து விசேடமான திருத்தப்-பாடடைந்தது; தனது நெடுங்-கணக்கையே திருத்தி விரித்துக் கொண்டது; பல்லாயிரஞ் சொற்-களையும் மேற்கொண்டது; வட-சொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக் கொண்டது. தெலுங் கிலக்கண-மெல்லாம் தமிழ்ப் போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கை யனுசரிக்கப் புகுந்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று. இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயபட்ட ராதிய பிராமண வையா கரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம். இவ்வாறே கன்னடமுந் தெலுங்கை-யொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப் படுத்திக்கொண்டது.
தமிழ்நாட்டில் பிறந்தும்; தமிழ்-மொழி பயின்றும்; தமிழரெனச் சொல்-லிக் கொண்ட போதிலும் தமிழ்-மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ஞானப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வ-தில்லை. அதனைத் தம் தாய் மொழி-யெனக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான் (திராவிட நாடு 2.11.1947) என்று மிகக் கச்சிதமாக சிறைபிடித்தது போல சித்திரம் தீட்டியவர் அறிஞர் அண்ணா.
சங்கராச்சாரியாக இருந்தாலும், சர்.சி.பி. ராமசாமி அய்யராகவிருந்-தாலும், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்-சாரியாராகவிருந்தாலும், சத்திய-மூர்த்தி அய்யராகவிருந்தாலும், தினமணி வைத்திய நாதய்யர்களாக இருந்தாலும் அண்ணா சொன்ன அச்-சுக்குள்தான் அகப்பட்டுக் கொள்-வார்கள்.
சமஸ்கிருத பாஷை பிரமத்திற்குச் சமானம் என்றார் மறைந்த சங்கராச்-சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (நூல்: ஞானவழி)
ஹிந்துவாக இருந்தாலும், முஸ்லீ-மாக இருந்தாலும் நமது பழைய பெருமைகளுக்கு திறவுகோல் சமஸ்-கிருதம் என்பது ராஜாஜியின் கணிப்பு (சென்னை லயோலா கல்லூரியில் 25.7.1937).
இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை _ அது சமஸ்கிருதம்தான் என்-கிறார். சர் சி.பி. ராமசாமி அய்யர் (உதகமண்டலத்தில் 5.6.1953).
என் கைக்குச் சர்வாதிகாரம் வந்தால் இந்தி மொழியோடு சமஸ்-கிருதத்தையும் கட்டாயப் பாட-மாக்குவேன் என்று சத்தியம் செய்-கிறார் சத்தியமூர்த்தி அய்யர்வாள் (மெயில் 25.7.1939) முதல் மூன்று பாரங்களில் மட்-டுமே ஹிந்தி கட்டாயம் இருப்பதால் அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக வேணும் வைக்கலாம்.
-_ ஆனந்தவிகடன் (17.10.1937)
இப்படி வரிசையாகவே சொல்லிக் கொண்டு போகலாம்.
இன்றைக்கு வடமொழி 26 எழுத்துகளை தமிழுக்குக் கொடுத்தும் தமிழிலிருந்து அய்ந்து எழுத்துகளை (எ,ஒ,ன,ற,ழ) பெற்றும் ஒருங்குறி (ஹிஸீவீநீஷீபீமீ) என்ற பெயரில் சமஸ்கிருதத்-துக்குப் புத்துயிர் கொடுத்து, ஏற்கெனவே தமிழைக் கெடுத்தது போதாது என்று புது முயற்சியில் தமிழில் கலப்படத்தை ஏற்படுத்தும் மகாசதியில் ஈடுபட்டுள்ளனர்.
சமஸ்கிருதத்தின் இந்தப் போக்குக் குறித்து பெரும் புலவரும், பார்ப்-பனருமான வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்), தமிழ் மொழியின் வரலாறு என்னும் தமது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்-பிடுகிறார்:
தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப்படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்தியமுனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங் கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென்பதும் பொருந்தாமை யறிக இனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழ வேண்டியது அவசியமாயிற்று. ஆரியர் தமிழும் தமிழர் சமஸ்கிருத-மும் பயிலப் புகுந்தனர். சமஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை வடமொழியென்று உரைப்-பாராயினர். அது வடமொழி-யென்னப்பட்டவுடனே தமிழ்மொழி தென்மொழியெனப்படுவதாயிற்று. தமிழரும், ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமைபற்றி அவ்விருவர் பாஷைகளும், சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. வடமொழி தமி-ழொடு மருவு முன்னே, அம்மொழி-யினின்றும் பாகத பாஷைகள் பலகிளைத்துத் தனித்தனி பிரிந்தன. இதற்கிடையிலே தான் தமிழ் மொழி-யினின்று தெலுங்கு மலையாளம் கன்னடந் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன.
இவ்வழி மொழிகளிலே தெலுங்-குதான் வடமொழியொடு மிகவுங் கலந்து விசேடமான திருத்தப்-பாடடைந்தது; தனது நெடுங்-கணக்கையே திருத்தி விரித்துக் கொண்டது; பல்லாயிரஞ் சொற்-களையும் மேற்கொண்டது; வட-சொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக் கொண்டது. தெலுங் கிலக்கண-மெல்லாம் தமிழ்ப் போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கை யனுசரிக்கப் புகுந்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று. இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயபட்ட ராதிய பிராமண வையா கரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம். இவ்வாறே கன்னடமுந் தெலுங்கை-யொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப் படுத்திக் கொண்டது. இதனாலன்றோ பழங்கன்னடம் என்றும் புதுக்கன்னடம் என்றும் அஃது இருவேறு பிரிவினதாகி யியங்குகின்றது. பழங் கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப் புலவர் பலர் இன்றுமுளர்.
இனி மலையாளமோ வெகுநாள் காறுந் திருந்தாதிருந்தது. இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர் எழுத்தச்சன் என்பானொரு-வனால் மிக்க திருத்தப்பாடு அடைந்தது. உடனே வடமொழிச் சொற்களையுஞ் சொற்றொடர்-களையும் சந்திகளையும் முடிபுகளை-யும் மலையாளம் மேற்கொண்டது.
மேற்கூறிய தெலுங்கு, கன்னடம், மலையாள மென்னும் மூன்று வழி-மொழிகளும் வடநூல் யாப்பையும் அணியையுமுடன் மேற்கொண்டு இயங்கப் புகுந்தன.
இனித் தமிழ்மொழியும் வட-மொழியுங் கலந்தியங்கு மாற்றைபற்றிச் சிறிது விரித்துரைப்பாம்.
வடமொழிக் கலப்பு
வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ்மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழி-யாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்-கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்-லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடை-யாராயும், கலையுணர்ச்சி சான்றவ ராயுமிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர். தமிழர்களிடத்தில்லா-திருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்.
முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்
என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவ லையுங்காண்க. இன்னும் அவர் தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களென-வும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரி-டத்திருந்த பல அரிய விஷயங்களை-யும், மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்-தன போலவும், வடமொழியின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.
தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப்-பாட்டிற்குப் பெரிது மிணங்கினாரல்-லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்ட போதிலும், பாஷைத் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோ-ரெழுத்துக்களும் அவ்வாறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. நாங்கள் செல்லு-மிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமி-யல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்-கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவ-தோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.
இவ்வாறு தமிழருட் பண்டிதரா-யினார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார். வடமொழிச் சொற்-களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்-டத்தில் வடசொற்கள் பல தமிழ்ப் பாஷையின்கண்ணே வேரூன்றி-விட்டன. அவ்வாறாயின் இது-போலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ அதையும் ஆராய்வாம்.
வடமொழி, தமிழ்மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்று-மே-யுள்ள பாஷையோடு இரு வகை வழக்குமுள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட் சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா. இது பாஷை நூலின் உண்மைகளு-ளொன்று. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வட-சொற்கள் பல தமிழின்கட் புகுந்தன. தமிழ்ச் சொற்களிற் சிலதாமும் வடமொழியின் கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சிலர் ஊர்ப் பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயிவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரத்திற் கியைந்த-வண்ணம், ஓசை வேறுபாடு செய்து-கொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்குவாராயினர். இது தானுண்மை; இதற்குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.
இனித் தமிழ்ப் புலவர்களாயினார் சமஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப் பார்த்தும் அவற்றை விலக்குதல், முடியாது போயிற்று. போகவே தமிழ்ப் புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதி-கட்குத் தக்கவாறு திரித்து மேற்-கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.
அதன்மேல் முதலிடை கடை-யெனும் முச்சங்கத்தார் காலத்தினும் வடசொற்கள் தமிழ் நூல்களி லேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தினுள்ளும் எட்டுத்-தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற்றொகை-களுள்ளும் ஆங்காங்கு இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.
பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்-கான சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்-கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வட-சொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கஷ்டமாய் விட்டது. ஆதலின் அவர்கள் என் செய்ய வல்லர்? முன்-னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமி-ழின்கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிதுகாலம் முயன்றனர். அவ்வாறே இவர்களது விடாமுயற்சியாற் சிறிதுகாலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவாமலுமிருந்தன. இக்காலத்-திலே தான் செந்தமிழ் கொடுந்தமிழ் எனத் தமிழ் இருபிரிவினதாகி யியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந்தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந்தமிழ். இவற்றைக் குறித்துப் பிரிதோர் அம-யத்-திற் பேசுவாம் என்று எழுதுகிறார் பார்ப்பனரான பரிதிமாற் கலைஞர்.
தமிழ்த் தாத்தா என்று பெருமை பல பேசும் உ.வே. சாமிநாதய்யர் செய்த தமிழ்த் தொண்டு என்ன?
தம்பேரன் திருமணத்திற்கு அவர் அச்சடித்த திருமணப் பத்திரிகையில் தமிழ் பட்ட பாட்டினை குடிஅரசு (18.9.1938) வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழ் அறிஞர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், கா. நமசிவாயனார் தம் மகள் திருமண அழைப்பினை எப்படி அச்சடித்துள்-ளார்கள் என்றும் அதே குடிஅரசு வெளியிட்டுள்ளது. ஒப்பிட்டு பார்ப்-பனர் தமிழை - _ தமிழர் தமிழை அறிந்துகொள்ளலாம்.
இதோ குடிஅரசு (18.9.1938) உள்ளபடி.
பிராமணத்தமிழ் என்பது ஒன்றுண்டா?
நேயர்களே மகாமகோபாத்தியாய தாக்ஷணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர்களைத் தமிழ்த் தெய்வமென்று நாடெங்கணும் அவர்தம் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் சில ஆண்டு-களுக்கு முன்பு கொண்டாடப்-பட்டது தங்களுக்குத் தெரிந்ததே. _ தமிழ் சங்க நூல்களாகிய சிலப்பதி-காரம் புறநானூறு, பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தியவர்கள் தோழர் அய்யரவர்களே என்பதும் அறி-வீர்கள். அண்மையில் இந்திய ஒலி-பரப்பில் பார்ப்பன நண்பர் ஒருவர் தமிழ்-நாட்டில் தமிழ் உரை நடை எழுதுகிறவர்களில் தலைசிறந்தவர் தோழர் அய்யரவர்களே ஆவர் என்று புகழ்பாடியதும் தாங்கள் நன்கு தெரிவீர்கள். இத்தகைய தமிழ்ப் பெரியார்-தம் மகன் பிள்ளை பேரன் தோழர். கே. சுப்பிரமணியனு-டைய திருமணத்தாளை (20.2.30) அச்சிட்டு வெளிப்படுத்தியதைக் கீழே தருகின்றேன். அதனைப்-பார்த்-தால் பிராமணத்தமிழ் என்று ஒன்று உண்டா என்று கேட்ட கல்வி அமைச்சர், கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் பிராமணத் தமிழைத் தமிழ் தெய்வத்தின் வழியே அறியப்பெறுவது. மகிழ்தற்குரிய-தல்லவா?
இனி அண்ணாமலைப் பல்கலைக்-கழகத் தமிழ்ச் சொற்பொழிவாளர் பண்டித நா.மு. வெங்கடசாமி நாட்டா-ரவர்கள் தம் இளைய புதல்வி மங்கையர்க் கரசியாரின் திருமணத் திருமுகத்தையும், காலஞ்சென்ற தமிழரி-சிரியர் கா. நமச்சிவாய முதலியாரவர்கள் தம் மூத்த புதல்வி பட்டம்மையாரின் திருமணமடலை-யும் ஈண்டு தருகின்-றேன். இவ்விரு-விதழ்களையும் பார்ப்-பவர் தனித்-தமிழ் நடையாய தமிழன் தமிழ் நடையை அறியப்பெறுவர். ஆகவே டாக்டர் சுப்பராயன் அவர்கள் இப்போது பிராமணன் தமிழுக்கும், தமிழன் தமிழுக்கும் வேற்றுமை தெரிவதோடு பிராமணன் தமிழே தமிழ்-மொழியை உருக்குலையச் செய்த-தென்பதும் அரிய பல தமிழ்ச்சொற்-களை வழக்கு வீழ்ந்து ஒழியச்செய்த தென்பதும் அறிதல் வேண்டும். இந்த நிலையில் இந்தி மொழியும் வந்தால் தமிழ் மொழி இன்னும் கேடுறும் என்பதற்கு அய்யமுண்டோ!
அன்பர்களே, உரைநடை எழுது-வதில் தமக்கு மிக்காரும் ஒப்பாரு-மின்றி பல் வகைகளைப்பற்றி அறிய பல உரைநடை நூல்கள் இயற்றிய தனித்-தமிழ்ப் பேராசிரியராய் மறை-மலையடி-களாரின் வழிநின்று தனித்தமிழைப் பாதுகாக்க, ஒல்லும் வகையில் முயற்சி செய்வீர்களாக! எழுதுவதும், பேசுவதும் இனி தமிழா-கவே இருத்தல் வேண்டும், அதுவும் தனித்தமிழாகவே இருத்தல் வேண்டும் என்பதைக் கடைப்பிடித்துத் தமிழ்-மொழி போற்றுமின்! தாய்மொழி போற்றுமின்!
- சிவாநந்தம்
திருமணத் திருமுகம்
திருச்சிற்றம்பலம்
மண்ணி னல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணி னல்லகதிக்,
கியாதுமோர் குறைவிலை கண்ணி னல்லஃதுறுங்
கமுமல வளநகர்ப் பெண்ணினல்லாளொடும்
பெருந்தகையிருந்ததே
திருவாளர்............................................அவர்களுக்கு அன்புள்ள ஐயா,
அம்மையப்பர் திருவருளை முன்-னிட்டு, நிகழும் தாது வாண்டு வைகாசித் திங்கள் 18ஆம் நாள் (31.5.36) ஞாயிற்றுக்கிழமை, ஏகாதேசி அத்தம இவை கூடிய நன்னாளில், பகல் 18ரு _ நாழிகைக்கு மேல் 23ரு _ நாழிகைக்குள் கன்னி ஓரையில்,
என் இளைய புதல்வி
திருவளர் நங்கை
மங்கையர்க்கரசியை
செங்கரையூரிலுள்ள திருவாளர்
சிவகாமிச்சேதிராயர் அவர்கள்
இளைய புதல்வர் திருவளர் நம்பி
வித்வான் திருநாவுக்கரசுக்கு
மணஞ்செய்விக்க ஆன்றோர்களால் உறுதி செய்யப்பெற்ற வண்ணம் நடுக்காவேரியில் நடைபெறும் திருமணத்-திற்கும் அதன் தொடர்புடைய ஏனைய சிறப்பு நிகழ்ச்சிகட்கும் தாங்கள் தமரு-டன் முன்னரே வந்திருந்து சிறப்பித்து, மண மக்களை வாழ்த்தியருள வேண்டு-கின்றேன்.
இங்ஙனம் தங்கள் அன்புள்ள
நா.மு. வெங்கடசாமி நாட்டார் தமிழ்ச் சொற்பொழிவாளர் அண்ணாமலை பல்கலைக்கழகம்
22.5.36 நடுக்காவேரி தங்கள் அன்புள்ள வருகையை எதிர் நோக்கும்
மு. தியாகராஜ நாட்டார்
நிலக்கிழவர், நடுக்காவேரி
மு. கோவிந்தராஜ நாட்டார்,
பி.ஏ., எல்., டி, ஆசிரியர்
நாட்டாண்மை உயர்திறப்பள்ளி பாவநாசம்.
சிவமயம்.
விவாகவதூகிரகப்பிரவேச முகூர்த்த பத்திரிகை
மகா_ள_ள ஸ்ரீ......................அவர்களுக்கு ஐயா, உபயக்ஷேமோபரி.
இந்த மங்கலகரமான சுக்ல. வருடம் மாசி_மாதம் 27-_ந் தேதி (19.3.30) திங்கட்கிழமை, தசமி புணர்பூசம் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை 7லு க்கு மேல் 11ரு நாழிகைக்குள்ளாகிய ரிஷபலக்னத்தில்
என் பௌத்தரனும் என் குமாரன் சிரஞ்சீவி எஸ் கலியாணசுந்தரன், புத்திரனுமான சிரஞ்சீவி
கே. சுப்பிரமணியனுக்கு
திருப்பத்தூர் வக்கீல், மாயூரம்
மகா_ள_ள_ஸ்ரீ ந. ராம சேஷைய்ய
ரவர்களுடைய குமாரி சௌபாக்கியவதி
ரங்கநாயகியை
பாணிக்கிரகணம் செய்விப்பதாக ஈசுவர கிருபையை முன்னிட்டுப் பெரியோர்களால் நிச்சியிக்கப்பெற்று முகூர்த்தம் திருவல்லிக்கேணி சிங்கராச்-சாரியர் தெரு, 6_ஆம் நெ. ராமானுஜ கூடத்தில் நடப்பதால், அதற்கும் பங்குனி-_மாதம் 1_உ (14.3.30) வெள்-ளிக்கிழமை ராத்திரி 7 மணிக்கு மேல் 8_மணிக்குள் கன்னியாலக்-கினத்தில், திருவேட்டீசுரன் பேட்டை பிள்ளை-யார் கோயில் தெருவில் உள்ள எனது கிருகத்தில் நடக்கும் வதூகிரகப் பிரவேசத்திற்கும் தாங்கள் இஷ்ட பந்து ஜனங்களுடன் முன்னதாகவே வந்-திருந்து மேற்படி முகூர்த்தங்களை நடப்பித்துச் சிறப்பிக்கும்படி கேட்டுக்-கொள்ளுகிறேன்.
இங்ஙனம் அன்புள்ள,
வே. சாமிநாதையன்,
(மகாமகோபாத்தியாயர்
தாக்ஷணாத்யகலாநிதி)
திருவேட்டீசுவரன்பேட்டை
தியாகராஜ விலாசம்
(20.2.30)
with best compliment of.
V.sundaram Iyer,
clerk, G.P.O. Madras
G. NarayanaswamyIyer. B.A.
Sonior Accountant Pestal Audit-office, Madras
S. Kalyanasundaram Iyer.
Translator. Highcourt Madras.
திருமணம்
அன்பார்ந்த ஐயா,
நிகழும் விபவ வருடம் சித்திரை மீ 14_ந்தேதி (26.4.38) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு என் மூத்த புதல்வி
திரு. பட்டம்மையை,
வடக்கப்பட்டு திரு நாராயணசாமி
முதலியார் அவர்கள்
இளையபுதல்வன்
திரு. சதாநந்தனுக்கு
சென்னை திருமயிலைக் கபாலீச்சரத்-தில் சிங்காரவேலர் என்னும் முருகப்-பெருமான் திருமுன் திருமணம் செய்து கொடுக்க உறுதி செய்திருப்பதால் அப்பொழுது தாங்கள் அன்பர்களுடன் வந்திருந்து அதனைச் சிறப்புற நடத்து-மாறு வேண்டுகின்றேன்.
பின்னர் சாந்தோம் ஹைரோட்டி-லுள்ள கடலகத்திற்கு ஊர்வலமாகச் செல்லுதல்.
இசைப்பாட்டு வியாழன் 5.30 மணி
இங்ஙனம்
தங்கள் அன்புள்ள
கா. நமச்சிவாயன்,
கடலகம், திருமயிலை
தங்கள் வருகையை அன்புடன் எதிர்பார்க்கும்
கா. மாணிக்கமுதலியார்,
வில்சன் அண்டு கம்பெனி
ச. ஆறுமுகமுதலியார்,
ஸி.ஸி. அண்டு சன்ஸ்
கா. பாலகிருஷ்ணமுதலியார்,
ஜனார்த்தனம் அண்டு கம்பெனி.

பார்ப்பனர் வளர்த்த _ வளர்க்கும் தமிழின் இலட்சணத்திற்கும், தமிழர் வளர்த்த -_ வளர்க்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று இப்பொழுது புரிகிறதா?

வெள்ளி, 12 நவம்பர், 2010

கல்கிக்கு வந்த எரிச்சல் (1)

கேள்வி: நாளை நமது ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் ஆட்சி ஏற்படுமானால் என்ன ஆகும்? என்று முதல்வர் தரம் தாழ்ந்து கேட்டிருக்கிறாரே!
பதில்: இனவுணர்வு அரசியல் என்ற பழைய பெருங்காய டப்பாவை மீண்டும் மீண்டும் தட்டிப் பார்க்கிறார் கலைஞர். அங்கே ஒன்றும் இல்லை என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை.
(கல்கி, 14.11.2010, பக்கம் 5)
இப்படி சொல்கிற கல்கிக்கு இனவுணர்வே கிடை யாதா? கல்கி அலுவலகத்திலும், இந்து அலுவலகத்திலும், டி.வி.எஸ். நிருவாகத்திலும் நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கும் பார்ப்பனர்கள் எத்தனை மடங்கு அதிக சதவிகிதத்தில் பணியாற்றுகிறார்கள் என்ற கேள்விக்கு நாணயமான முறையில் கல்கி பதில் சொல்லுமா?
முதலமைச்சராகவிருந்த ஓமாந்தூர் இராமசாமி அவர்களை தாடி இல்லாத ராமசாமி நாயக்கர் என்று பார்ப் பனர்கள் ஏன் கூறினார்கள்? பார்ப்பனர் அல்லாதாருக்கும் வேலை வாய்ப்பில் கொஞ்சம் கருணை காட்டினார் என்பதால்தானே? காந்தியார்வரை சென்று புகார் செய்தது யார்? பார்ப்பனர்கள்தானே!
காந்தியாரிடம் சென்று புள்ளி விவரங்களோடு ஓமாந்தூரார் விளக்கியபோதுதான் காந்தியாருக்கே பார்ப்பன விஷமம் - வல்லாண்மை என்னவென்று தெரிந் தது. உண்மையைத் தெரிந்துகொண்ட காந்தியார் பார்ப் பனர்களைப் பார்த்து, பிராமணர்களாகிய நீங்கள் ஏன் பிணம் அறுக்கும் டாக்டர்களாக ஆகவேண்டும்? வேதம் படிக்கவேண்டியதுதானே? என்று கேட்டாரா - இல்லையா?
காந்தியாரைச் சந்தித்தபின், தம்மைப்பற்றிப் புகார் கூறி எழுதிவரும் இந்து ஆசிரியரை அழைத்து, உங்கள் அலு வலகத்தில் எத்தனைப் பேர் பார்ப்பனர் அல்லாதார் பணி யாற்றுகின்றனர்? என்று கேட்டபோது விழி பிதுங்க வில்லையா?
இந்த யோக்கியதை உள்ள கூட்டம்தான் உண்மையைச் சொன்னால் இன உணர்வு என்பது பழைய பெருங்காயம் இருந்த பாண்டம் என்று சொல்கிறது. இந்தப் பிரச்சினை வெடித்தால் தங்கள் இனத்துக்கு ஆபத்து என்ற உணர்வில் துடிக்கிறது.
பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் அல்லது ஆரியர் - திராவிடர் என்பது ஏதோ தந்தை பெரியாராலும், திராவிட இயக்கத்தாலும் கற்பனையாக உருவாக்கப்பட்டது என்பதுபோல எழுதுகிறார்களே, இது உண்மையா?
பார்ப்பனர்களுடைய வேதங்களும், மனுதர்மங்களும் பிராமணர் - சூத்திரர்பற்றிப் பேசவில்லையா? ஒரு குலத்துக் கொரு நீதி என்பதுதான் தர்மம் என்று கூறவில்லையா?
1967 ஆம் ஆண்டு தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடச் சொன்னதன் பொருள் என்ன? ஏன் பிராமணர்களுக்குத் தனி வேண்டு கோள் விடுத்தார்? பூணூல் என்று ஏன் குறிப்பிட்டுச் சொன்னார்?
தேர்தல் முடிந்து தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், தி.மு.க. பழைய பெருங்காயம் இருந்த பாண்டம் (இப்பொழுது கல்கி பயன்படுத்திய அதே உதாரணத்தை) அதனைத் துடைத்து எடுத்துவிட்டேன் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) இதே கல்கியில் எழுதினாரோ - அப்பொழுது தந்தை பெரியார் என்ன கூறினார்? நான் கண் ஜாடை காட்டினால் அவர்கள் என்னிடம்தான் வருவார்கள் என்று சொல்லவில்லையா?
அதேபோல் நடந்ததா - இல்லையா? 1971 பொதுத் தேர்தலில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று வெளிப்படையாகத் தேர்தல் பிரச்சாரம் நடக்கவில்லையா? அதன் காரணமாக தி.மு.க. அமோக வெற்றி பெற்றதே - கல்கி மறந்துவிட்டதா?
இந்தத் தேர்தலில் (1971)என்ன சிறப்பு அம்சம் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா?
முன்பு தந்தை பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்தைத் துவங்கினார். இந்தத் தேர்தலில் ராஜாஜி அதனைத் துவக்கியுள்ளார் என்று பதில் கூறினாரே (3.3.1971) - அதன் பொருள் என்ன?
திருவொற்றியூரில் முதலமைச்சர் ராஜகோபாலாச் சாரியார் பேசினாரே (18.9.1953) தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்றாரே இதற்கு என்ன வியாக்கியானம்?
ஆச்சாரியார் சொன்னதைத்தானே தந்தை பெரியார் வேறு சொற்களில் சொன்னார்?
இன்றைய அரசியல் போராட்டம் என்பதே கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் எல்லாக் கட்சிகளுக்கும் சமுதாயத் துறைத் தத்துவங்கள்தான் அடிப்படை லட்சியமே தவிர, மற்றபடி வாயால் சொல்வதற்குக்கூட கொள்கைகள் கிடையாதே! அதாவது எதுவும் பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையைக் கொண்டதுதான் (விடுதலை, 22.5.1971) என்றாரே தந்தை பெரியார்.
ஆச்சாரியாரே ஒப்புக்கொண்ட இந்த இனப் போராட் டத்தைத்தான் கலைஞர் உண்மையைச் சொல்லும்போது கல்கிகளுக்கு ஏன் உள்ளங்கால் முதல் உச்சிக்குடுமிவரை எரிச்சல்?
இவ்வளவு எழுதுகிறதே கல்கி - அவாள் வீட்டில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுவதில்லையா? பூணூல் புதுப்பிப்பு நடைபெறுவதில்லையா?
சட்டமன்றத்தில் நான் பாப்பாத்திதான் என்று ஜெய லலிதா சொன்னபோது கல்கி இதே பாணியில் எழுதாதது ஏன்?
அதுவும் பார்ப்பனப் புத்திதானே? கலைஞர் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் மீண்டும் 1971 நடக்கும் என்ற உதறல்தான் கல்கிகளை இப்படி எழுதச் சொல்கிறது.
தமிழர்களே உஷார்! உஷார்!!

வியாழன், 11 நவம்பர், 2010

கி.வீரமணி கேள்வி-பதில்

கேள்வி : கேரளாவைச் சேர்ந்த அல்போன்சா என்ற கன்னிகா பெண்ணுக்கு, புனிதர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அதற்காக நம் நடுவண் அரசு அவரைப் பாராட்டி ரூ. 5க்கான நாணயம் வெளியிட்டது. ஆனால், பெரியார் நினைவாக வெறும் 50 காசு மதிப்புள்ள தபால் தலையை நடுவண் அரசு வெளியிட்டது சரியா?
- அரவரசன், சென்னை
பதில் : இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மதச்சார்பின்மை ஆட்சியின் முகத்தில் குத்து, காயம்!

கேள்வி : பிள்ளையார் சதுர்த்தி விழாவிற்கு முஸ்லிம்களையே, அழைத்திருப்பதாக பெருமை கொள்ளும் பார்ப்பனீயம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்கான வழக்கைத் திரும்பப் பெறுமா?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : நல்ல பொறிதட்டும் கேள்வி! அவ்வளவு எளிதில் பதில் கிடைக்காது.

தாமதம் ஏன்?


கேள்வி: சமீப காலமாக மக்களை ஏமாற்றும் போலிச் சாமியார்கள் நிறைய பிடிபடு கிறார்கள். யார்மீது தவறு?
ஜெயேந்திரர் பதில்: மனிஷனுக்குப் பேராசை இருக்கிறவரைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஏன்னா சுருக்கு வழியில் சம்பாதிக்கனும்னு ஆசைப்படுகிற நிறைய பேர் போலிச் சாமியாராக எழுந் தருளி இருக்காங்க. ஜனங் களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால ஜனங்க, சாமியார்கள் இரண்டு பேருக்குமே ஆபத்து வருது. ஆனா ஜனங்க தப்பிச்சு வேறொரு சாமியார்கிட்ட போயிடுறாங்க. இவங்களை நம்பி வேஷம் போட்ட சாமி யார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால இந்த விஷயத்தில் சாமியார்கள் தான் பொது ஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கி யிருக்க வேண்டும் (சொல்லி விட்டு, வாய்விட்டு ரசித்துச் சிரித்தார்).
- (குங்குமம், 27.3.1998).
எவ்வளவு தொலைநோக் கோடு சாமியார்களைப்பற்றி விஸ்தாரமாகப் பேசி சிரித் திருக்கிறார். தான் சொன் னது தனக்கே வரும் என்று அவர் கிஞ்சிற்றும் எதிர்பார்த் திருக்கமாட்டார். அவர் தொலைநோக்கோடு சொன் னபடி, இப்பொழுது மக்கள் வாய்விட்டு ரசித்துச் சிரிக்க வேண்டியதுதான்.
வேஷம் போட்ட சாமி யார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. ஆம், அப்படித் தான் ஜெயேந்திர சரஸ்வதி யும், குட்டி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியும் ஜெயிலுக்குப் போனாங்க.
என்ன திடீரென்று சங் கராச்சாரியார்பற்றி இன்று... பொருத்தம் இல்லாமலா? ஆறு ஆண்டுகளுக்குமுன் (2004) இதே நாளில்தான் காஞ்சீபுரம் வரதராஜபெரு மாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக் கில் கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரர்.
இந்தியன் கிரிமினல் கோட் 302, 120-பி, 34, 201 ஆகிய பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார். 61 நாள்கள் ஜெயேந்திரர் மாமியார் வீட் டுக்குச் சென்று ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தார்.
இவரது ஜூனியர் 31 நாள்கள் மாமியார் வீட்டில் இருந்தார். ஜாமீனில் வெளியே வந்து சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி காவல் நிலையத்தில் மூன்று வாரம் கையொப்பம் போட்டுக் கொண்டு கடந்தார் - சென் னையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று ஆணை.
ஜெகத்துக்கே குருக் களின் யோக்கியதை இத்தி யாதி - இத்தியாதிதான்.
ஆறு ஆண்டுகள் ஆகி விட்டனவே, இவர்கள் மீதான வழக்கு என்னா யிற்று? சாட்சிகள் எல்லாம் பல்டி அடிப்பது ஏன்? இதுபற்றி அரசு ஆய்வு செய்யவேண் டும். என்னென்ன காரணங் களால் பிறழ் சாட்சிகளாயி னர் என்பது மிகவும் முக் கியம். வழக்கு விசாரணை யைக் காலம் கடத்த கடத்த குற்றவாளிகளுக்குத்தான் கொண்டாட்டம். இதற்குப் பின் நடந்த பல கொலை வழக்குகளில் தீர்ப்புகள் வந்துவிட்டனவே! இவர் வழக்கு மட்டும் ஏன் இப்படி? சங்கராச் சாரி என்றால் அசல் நெய்யில் பொரித்த அப்பளமோ!
- மயிலாடன்

தமிழில் படித்தோருக்கு வேலை வாய்ப்பு


      தமிழ் மொழி மூலமாக படித்தவர்கள் மய்ய அரசின், மாநில அரசின் அல்லது தனியார்த் துறை நிறுவனங் களில் பணிக்குத் தெரிவு பெறுவதற்கு மிகக்குறைந்த வாய்ப்புப் பெற்றுள்ளனர். எனவே, மாநில அரசின் பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது தேவையாகிறது.
  தமிழ்நாடு மாநிலத்தில் பெரும்பாலான பள்ளி களிலும், கல்லூரிகளிலும் உள்ள பாடப் பிரிவுகள் தமிழ் மூலமாக நடத்தப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு அரசானது தமிழ்மொழி மூலமாகப் படித்த வர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்குவது தொடர்பான தீர்மானத்தைப் பரிசீலனை செய்து, தமிழ்மொழி மூலம் படித்தவர்களுக்கு நேரடி ஆள் சேர்ப்பின் மூலம் நிரப்பப்படவேண்டிய, இம் மாநிலத்தின் கீழ்வரும் பணிகளுக்கான நியமனங்களில் எழும் காலி இடங்களில் 100-க்கு 20 விழுக்காடு என்பதான அளவினை தனியே ஒதுக்கி வைப்பது என முடிவு செய்துள்ளது என்று அறிவித்து அதற்கான சட்ட முன்வரைவினை மாண்புமிகு அமைச்சர் துரை முருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்துள்ளார்.
     இதனைக் கட்சி வேறுபாடின்றி ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.
கோவையில் நடைபெற்ற (ஜூன் 23-27, 2010) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவுரையில் முதலமைச்சர் அறிவித்ததைச் செயல்படுத்தும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகிறது.
     திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும் இத்தகைய கருத்தினை ஆலோசனை யாகத் தமிழக அரசிடம் அளித்துள்ளதையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.
    தமிழ்நாடு அரசின் இந்த முடிவும்,அதற்கான சட்டமும் மிகவும் வரவேற்கவும்,பாராட்டவும் தகுந்ததாகும்.வேலை வாய்ப்புக்காக 20விழுக்காடு என்று அறிவிக்கப்பட்டாலும்,       தாய்மொழியான தமிழுக்கு அளிக்கப்பட்ட முக்கிய மரியாதையும் இதில் அடங்கியுள்ளது.
தாய்மொழியில் படித்தவர்களுக்கு வாய்ப்புக் கிட்டாது; ஆங்கிலத்தில் படித்தால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதேகூட தமிழை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவதாகும்.
             அந்த வகையில் இந்தச் சட்டம் வெறும் வேலை வாய்ப்புக்கானது மட்டுமல்ல - தமிழின் சுயமரி யாதைக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றே கருதவேண்டும்.
          கிராமப்புறங்களில் முதல் தலைமுறையாகப் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழி யாகக் கொண்டு கற்பது என்பது இயலாத காரிய மாகும். தாய்மொழி மூலம் கற்பதே இயற்கையானதும், எளிதானதுமாகும்.
அதேநேரத்தில் நகர்ப்புறங்களில் எல்லா வசதி களும் நிறைந்த கல்விக் கூடங்களில் ஆங்கிலத்தைப் பயிற்சி மொழிகளாகக் கொண்டு படிக்கிறார்கள்.
                      இந்த நிலையில் தமிழ்மொழியில் படித்தவர்களையும், ஆங்கில முறையில் படித்தவர்களையும் சமப் போட்டியாளர்களாகக் கருதிப் போட்டித் தேர்வுகளில் அமர வைப்பது எந்த வகையிலும் நியாயமானதாகாது.
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும் நிலையில், தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப் பில் முன்னுரிமை கொடுப்பதுதானே நியாயமான தாகவும், தேவையானதாகவும், இயல்பானதாகவும் இருக்க முடியும்?
              இதனைச் சரியாகப் புரிந்துகொண்டு மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான இவ்வரசு இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது - ஒரு திருப்புமுனையைக் கொடுப்பதாகும்.
                 தாய்மொழியில் படிப்பதை ஊக்கப்படுத்துவதாகும். அய்.ஏ.எஸ். தேர்வுவரை தமிழில் எழுதலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசு நடத்தும் (யு.பி.எஸ்.சி.) தேர்வுகளையும் தமிழில் எழுதிட வாய்ப்பு இருக்கிறது.
   முதல் தலைமுறையாகக் கல்வி கற்க முன்வரும் பிள்ளைகளுக்குத் தாய்மொழிக் கல்விதான் பயனுள் ளதாக இருக்கும். அதேநேரத்தில், ஆங்கிலத்தையும் முக்கிய பாடமாக வைத்து, அதிலும் படிப்படியாகத் தேர்ச்சி பெறச் செய்ய வைப்பதும் மிகவும் அவசிய மாகும்.
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே தமிழ்நாட்டில் என்று அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது சட்டமாகவே ஆக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

விடுதலை தலையங்கம்(11.11.2010)

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை முறிய வைக்க மத்திய அமைச்சர் இராசா குறி வைக்கப்படுகிறார்!

மத்திய அமைச்சர் ஆ. இராசா அவர்களைப் பதவியிலிருந்து வெளியேற்றிட நடைபெறும் சூழ்ச்சிகளைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பதவி விலக வைத்து, அதன்மூலம் தி.மு.க.விற்குப் பழியை - களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது, வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சியினருக்கு அவலாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும்.இதில் உள்ள முக்கிய காரணம் - உயர்ஜாதி ஆதிக்கவாதிகளான அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொலைக்காட்சியினருக்கு மத்திய அமைச்சர் ஆ. இராசா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதேயாகும்.
தி.மு.க.வை - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற்ற சதி
இரண்டாவது, தி.மு.க.வை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எப்படியாவது வெளியேற்றிவிட இதுவரை செய்த முயற்சிகள் - காங்கிரஸ் தலைமை, தி.மு.க.வின் நம்பகத்தன்மை, நாணயம் மிக்க நட்புறவு இவற்றை மதித்து - பலிக்க இடந்தராமல், தொடர்ந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க.வும், காங்கிரசும் நல்ல நட்புறவுடன் இருக்கும் என்று புரிய வைத்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் கூட்டுச் சேர தனது பல்லவி, அனுபல்லவி எல்லாம் முடிந்து சரணம் பாடியும் அ.தி.மு.க.விற்கு அழைப்பு வராது போலுள்ளதே என்று கருதிய ஜெயலலிதா, இப்படி இதை சாக்காக பிடித்துக்கொண்டு, ஊழலை ஒழிக்க திடீரென பரசுராம அவதாரியாக ஆர்ப்பரிக்கிறார்!
மற்ற அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் - தலைமையில் உள்ள கூட்டணியில் ஒரு களங்கத்தை ஏற்படுத்த இதுதான் சமயம் என்று கருதி, குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து மீண்டும் மீண்டும் ஒப்பாரி வைத்து அழுது நாடகம் ஆடுகின்றனர்.
நரியார்கள் - நாரியர்கள் வேலை
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே முன்வைத்துப் பிரச்சாரமும் செய்து - தோல்வி கண்ட ஓராண்டுக்குப் பிறகு, ஏன் திடீரென இராசாவின் பதவி ரத்தம் குடிக்க இந்த நரியார்கள் - நாரியர்கள் துடிக்கிறார்கள்?
மத்திய அமைச்சர் இராசா இதில் தனியே சொந்தமாக முடிவு எடுத்தாரா? எடுக்கத்தான் இயலுமா?
மத்திய அமைச்சர் இராசாவின் விளக்கம்
டிராய் என்ற தொலைத்தொடர்பு அமைப்புதானே இதனை முடிவு செய்தது - பிரதமர் ஒப்புதலுடன்தானே இத்தகைய நடவடிக்கைகள் நடந்துள்ளன?
இவற்றை நாடாளுமன்ற மக்களவையிலே அமைச்சர் இராசா மிகத் தெளிவாக, ஆணித்தரமாக விளக்கினாரே, அதை மறுக்க முடியுமா?
மராத்தியத்தில் ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என்றால், அது மத்திய நிதி அமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல இரு மாநிலங்கள் பிரச்சினை (மகாராஷ்டிரா, டில்லி) அதனைக் காங் கிரஸ் கட்சி ஆதாரபூர்வ மாகத் தெரிந்து அந்த முடிவை எடுத்தது அவர் களது உரிமை. கமிட்டி சொன்னதை வைத்து நடவடிக்கை.
ஆனால், இங்கே அமைச்சர் இராசா செய்யாத குற்றத்திற்காக ஜென்ம தண்டனை என்பதுபோல இப்போது ஏன் பதவி விலகவேண்டும் - அவர் வேறு இலாகாவிற்கு ஏன் செல்ல வேண்டும்?
குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதா?
சி.பி.அய். வழக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளரா? குற்றம்சாற்றி நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பு வந்துள்ளதா?
ஆடிட்டர் - ஜெனரல் (GAG) அறிக்கைகூட அதிகார பூர்வமாக இன்னமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லையே? குடியரசுத் தலைவரிடம் சமர்ப் பிக்கப்பட்டது என்பதிலிருந்து காகிதப் புலிகளின் ரத்த வேட்டைதானே இப்படி ஆவேசங் காட்டச் செய்கிறது?
இதே இராசா 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல கோடி ரூபாய்கள் அதிகம் விட்டு, மத்திய அரசின் கருவூலத்திற்கு 66,980 ஆயிரம் கோடி ரூபாய் பெரு வருவாய் தந்தாரே - அதற்கு சிறு பாராட்டினை இவர்கள் யாரும் தெரிவித்தார்களா?
மத்திய அமைச்சரவை என்பது பிரதமரின் தலைமையில் கூட்டுப் பொறுப்பு(Collective Responsibility) உள்ள ஒன்று அல்லவா? இதில் தனியாக ஒருவரை பலிகடாவாக்க முயற்சிப்பது எந்த வகையில் ஜனநாயகம் - அமைச்சரவையின் அறம் ஆகும்?
ஊழலுக்கு அப்பாற்பட்டவரா ஜெயலலிதா?
ஜெயலலிதாவின் வழக்குகள் - ஊழல்கள் பலவும் மக்கள் மன்றம் அறிந்ததே! வெளிநாட்டிலிருந்து யாரோ அனுப்பிய நன்கொடையை தன் கணக்கில் வரவு வைத்தாரே - அளவுக்கு அதிகமான சொத்து சேர்ப்பு, டான்சி வழக்கில் நிலத்தை திருப்பித் தந்து வெளியே வந்தது எல்லாம் மக்களுக்கு மறந்துவிடுமா?
இராசாவை பதவி விலகல் கூச்சலில் பல உள்நோக்கங்கள் பலருக்கு!
இது பந்தலிலே பாவக்காய் என்ற ஒப்பாரி வைத்து அழுத பெண்கள் கதைபோல...
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு உள்நோக்கம்!
பின்னணியில் ஏகபோகக் கொள்ளையர்கள்
இதில் மற்றொரு முக்கிய பின்னணி - முன்பு ஏகபோகமாக அனுபவித்த கொள்ளையைத் தடுத்து, லாபக் குபேரர்களின் ஏகபோகமில்லாது - பலருக்கும் பிரித்தளிக்க பிரதமர் ஒப்புதல் முதற்கொண்டு பெற்று, அரசு கருவூலத்திற்கு ஏராள வருவாய் வரும்படி செய்த இராசாவின்மீது ரவுத்திரம் - கோபாக்கினி ஊடகங் களை ஏவிவிடுகின்றனர்!
2011 இல் புரிய வைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மீண்டும் 1971 தேர்தல் முடிவுகள் அபரிமிதமாக தி.மு.க.வுக்குக் கிடைத்ததே - அதுபோல இராசாபற்றி ஓங்காரக் கூச்சல் நிச்சயம் வெற்றிப் பாதைக்கு தி.மு.க.வை அழைத்துச் செல்லும் என்பது 2011 இல் புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். புரியாவிட்டால் புரிய வைப்போம்!

விடுதலை-11-11-2010

புதன், 10 நவம்பர், 2010

இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா ?


1. 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் `` பஞ்சமர்கட்கு இடம் இல்லை'' என்று அச்சிட்டார்கள்.
சென்னையிலே இந்த நிலை 115 ஆண்டுகட்கு முன்பு!

இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்தபோதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல்.
1926 க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) ``மகாத்மா '' காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?

3. பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, `` தேச பக்தர்கள்''வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

4. 1933 -இல் அன்னை நாகம்மையார் மறைந்த-அடுத்த நாளே தடையை மீறி, ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்து தந்தைபெரியார் ஒரு மாதகாலம் சிறை புகுந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

5. 1933 அக்டோபரில் ``குடிஅரசில்'' தந்தைபெரியாரால் எழுதப்பட்ட ``இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?'' என்ற கட்டுரையில் தீவிர பொதுவுடைமை வாடை வீசுகிறது என்று சொல்லப் பட்டு இ.பி.கோ. 124 ஏ பிரிவின்படி ராஜதுவேஷம் குற்றம் சுமத்தப் பட்டு, கட்டுரை ஆசிரியர் தந்தைபெரியார் அவர்களும், வெளியீட்டாளர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்களும் (பெரியாரின் தங்கை) பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் தண்டிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?    

6. 1938-இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அய்யாவுக்கு அளிக்கப்பட்ட பட்டம் தான் புபெரியார்'' என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. 1960 வாக்கில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட `` சோதனைக் குழாய் குழந்தை'' பற்றி 1938-லேயே கருத்துத் தெரிவித்தவர் தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

8. 1942 ஆம் ஆண்டு கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியதும், அதை தந்தைபெரியார் ஏற்க மறுத்து, பதவியை துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?

9. 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ 1 இலட்சம் நன்கொடை தந்தபோது-தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா?