வியாழன், 11 நவம்பர், 2010

கி.வீரமணி கேள்வி-பதில்

கேள்வி : கேரளாவைச் சேர்ந்த அல்போன்சா என்ற கன்னிகா பெண்ணுக்கு, புனிதர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அதற்காக நம் நடுவண் அரசு அவரைப் பாராட்டி ரூ. 5க்கான நாணயம் வெளியிட்டது. ஆனால், பெரியார் நினைவாக வெறும் 50 காசு மதிப்புள்ள தபால் தலையை நடுவண் அரசு வெளியிட்டது சரியா?
- அரவரசன், சென்னை
பதில் : இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மதச்சார்பின்மை ஆட்சியின் முகத்தில் குத்து, காயம்!

கேள்வி : பிள்ளையார் சதுர்த்தி விழாவிற்கு முஸ்லிம்களையே, அழைத்திருப்பதாக பெருமை கொள்ளும் பார்ப்பனீயம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்கான வழக்கைத் திரும்பப் பெறுமா?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : நல்ல பொறிதட்டும் கேள்வி! அவ்வளவு எளிதில் பதில் கிடைக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக