வியாழன், 11 நவம்பர், 2010

தமிழில் படித்தோருக்கு வேலை வாய்ப்பு


      தமிழ் மொழி மூலமாக படித்தவர்கள் மய்ய அரசின், மாநில அரசின் அல்லது தனியார்த் துறை நிறுவனங் களில் பணிக்குத் தெரிவு பெறுவதற்கு மிகக்குறைந்த வாய்ப்புப் பெற்றுள்ளனர். எனவே, மாநில அரசின் பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது தேவையாகிறது.
  தமிழ்நாடு மாநிலத்தில் பெரும்பாலான பள்ளி களிலும், கல்லூரிகளிலும் உள்ள பாடப் பிரிவுகள் தமிழ் மூலமாக நடத்தப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு அரசானது தமிழ்மொழி மூலமாகப் படித்த வர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்குவது தொடர்பான தீர்மானத்தைப் பரிசீலனை செய்து, தமிழ்மொழி மூலம் படித்தவர்களுக்கு நேரடி ஆள் சேர்ப்பின் மூலம் நிரப்பப்படவேண்டிய, இம் மாநிலத்தின் கீழ்வரும் பணிகளுக்கான நியமனங்களில் எழும் காலி இடங்களில் 100-க்கு 20 விழுக்காடு என்பதான அளவினை தனியே ஒதுக்கி வைப்பது என முடிவு செய்துள்ளது என்று அறிவித்து அதற்கான சட்ட முன்வரைவினை மாண்புமிகு அமைச்சர் துரை முருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்துள்ளார்.
     இதனைக் கட்சி வேறுபாடின்றி ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.
கோவையில் நடைபெற்ற (ஜூன் 23-27, 2010) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவுரையில் முதலமைச்சர் அறிவித்ததைச் செயல்படுத்தும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகிறது.
     திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும் இத்தகைய கருத்தினை ஆலோசனை யாகத் தமிழக அரசிடம் அளித்துள்ளதையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.
    தமிழ்நாடு அரசின் இந்த முடிவும்,அதற்கான சட்டமும் மிகவும் வரவேற்கவும்,பாராட்டவும் தகுந்ததாகும்.வேலை வாய்ப்புக்காக 20விழுக்காடு என்று அறிவிக்கப்பட்டாலும்,       தாய்மொழியான தமிழுக்கு அளிக்கப்பட்ட முக்கிய மரியாதையும் இதில் அடங்கியுள்ளது.
தாய்மொழியில் படித்தவர்களுக்கு வாய்ப்புக் கிட்டாது; ஆங்கிலத்தில் படித்தால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதேகூட தமிழை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவதாகும்.
             அந்த வகையில் இந்தச் சட்டம் வெறும் வேலை வாய்ப்புக்கானது மட்டுமல்ல - தமிழின் சுயமரி யாதைக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றே கருதவேண்டும்.
          கிராமப்புறங்களில் முதல் தலைமுறையாகப் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழி யாகக் கொண்டு கற்பது என்பது இயலாத காரிய மாகும். தாய்மொழி மூலம் கற்பதே இயற்கையானதும், எளிதானதுமாகும்.
அதேநேரத்தில் நகர்ப்புறங்களில் எல்லா வசதி களும் நிறைந்த கல்விக் கூடங்களில் ஆங்கிலத்தைப் பயிற்சி மொழிகளாகக் கொண்டு படிக்கிறார்கள்.
                      இந்த நிலையில் தமிழ்மொழியில் படித்தவர்களையும், ஆங்கில முறையில் படித்தவர்களையும் சமப் போட்டியாளர்களாகக் கருதிப் போட்டித் தேர்வுகளில் அமர வைப்பது எந்த வகையிலும் நியாயமானதாகாது.
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும் நிலையில், தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப் பில் முன்னுரிமை கொடுப்பதுதானே நியாயமான தாகவும், தேவையானதாகவும், இயல்பானதாகவும் இருக்க முடியும்?
              இதனைச் சரியாகப் புரிந்துகொண்டு மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான இவ்வரசு இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது - ஒரு திருப்புமுனையைக் கொடுப்பதாகும்.
                 தாய்மொழியில் படிப்பதை ஊக்கப்படுத்துவதாகும். அய்.ஏ.எஸ். தேர்வுவரை தமிழில் எழுதலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசு நடத்தும் (யு.பி.எஸ்.சி.) தேர்வுகளையும் தமிழில் எழுதிட வாய்ப்பு இருக்கிறது.
   முதல் தலைமுறையாகக் கல்வி கற்க முன்வரும் பிள்ளைகளுக்குத் தாய்மொழிக் கல்விதான் பயனுள் ளதாக இருக்கும். அதேநேரத்தில், ஆங்கிலத்தையும் முக்கிய பாடமாக வைத்து, அதிலும் படிப்படியாகத் தேர்ச்சி பெறச் செய்ய வைப்பதும் மிகவும் அவசிய மாகும்.
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே தமிழ்நாட்டில் என்று அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது சட்டமாகவே ஆக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

விடுதலை தலையங்கம்(11.11.2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக