அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அண்மையில் அளித்த பேட்டி அவரின் உண்மையான உருவத்தைத் தனக்குத்தானே வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
காங்கிரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவினை அளிக்க முன்வந்துவிட்டார். காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பதாகையைப் பிடித்துக்கொண்டு அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகளுக்கு இதன்மூலம் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. தன்னை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விடுவது என்பது ஜெயலலிதா அம்மையாருக்குக் கைவந்த கலையாகும்.
ஜெயலலிதா அளித்த அந்தப் பேட்டியைப் பார்த்த, படித்த அத்தனைப் பேர்களின் கவனத் துக்கு உடனடியாக வந்தவர்கள் இடதுசாரிகள் தான்.
இந்த வெளிப்படையான பேட்டிக்குப் பிறகு இடதுசாரிகளின் நிலை என்ன? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
நான்கு நாள்கள் கடந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமது அதிருப்தியைத் தெரி வித்துள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரவேண்டு மானால், காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணிபற்றி அய்யந்திரிபற தெரிவிக்கப்பட்டாகவேண்டும் என்ற தொனி சி.பி.எம். கட்சியின் அறிக்கையில் காணப்படவில்லை.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இதற்குப் பிறகும் காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டணி ஜெயலலிதா தலைமையில் உள்ளதுதான் என்ற எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
இடதுசாரிகள் காங்கிரசை எதிர்ப்பதற்கும், ம.தி.மு.க. காங்கிரசை எதிர்ப்பதற்கும் அடிப் படையில் வேறுபாடு உண்டு. ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசின் போக்கினை எதிர்ப்பது என்பது அதன் முக்கிய நோக்கமாகும்.
இப்பொழுது இடதுசாரிகளுக்கு ஜெயலலிதா கொடுத்த நெருக்கடியைப்போல - நாடாளுமன்றத் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக விடுதலைப்புலிகள் பற்றியும், ஈழத் தமிழர்கள் பற்றியும் அங்கு சிங்கள அரசு மேற்கொண்ட கண்மூடித்தனமான இன அழிப்புப் பற்றியும் தெரிவித்த கருத்து ம.தி.மு.க.வைப் பெரும் நெருக் கடிக்கு உட்படுத்தியது.
கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே!
ஜெயலலிதா பதில்: அங்கு ஈழம் இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியாக, அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக் கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல் லப்படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால்,இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் -விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். (நமது எம்.ஜி.ஆர்., 18.1.2009) என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு விட்டார். ம.தி.மு.க. உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத் தியின் கதியை அடைந்தது.
இப்படி தன்னை நம்பி கூட்டு வைத்துள்ள வர்களை அவமானப்படுத்துவது - அவர்களைச் சற்றும் பொருட்படுத்தாத்தனம் என்பது ஜெயலலிதாதவுக்குச் சர்வசாதாரணமாகும்.
பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துக்கொண்டி ருந்தபோதும், அதே நிலைதான்; ஜெயலலிதாவோடு கூட்டு வைத்திருந்த அந்தக் காலம் தமது நிம்மதி குலைந்த காலம் என்று வாஜ்பேயியே பேட்டி அளித்தார் என்பதும் நினைவூட்டத்தக்கதாகும்.
ஜெயலலிதாவை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான் என்பதைக் காலம் கடந்தாவது கூட்டணிக் கட்சியினர் உணர்வார்களாக!
விடுதலை-தலையங்கம்-15-11-2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக