ஞாயிறு, 14 நவம்பர், 2010

கி. வீரமணி வேண்டுகோள்!


          டெலிகாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்த மான ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை (சிஏஜி) ரூபாய் 1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்த அறிக்கை செய்தி அதிகார பூர்வமாக குடியரசு தலைவர் அலுவலகத்தினாலோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ அல்லது அரசில் இருந்தோ பத்திரிக்கைகுறிப்பாக (Press Communication) வெளிவராத நிலையில் இதை செய்தி ஊடகங்களுக்கு குறிப்பாக சில ஆங்கில தொலைக்காட்சி களுக்கு மற்றும் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளேடுகளுக்கு எப்படி வெளியாக்கப்பட்டது? அரசின் மிக முக்கிய இரகசிய அறிக்கை எப்படி வெளியானது? என்பது பற்றி அரசு சம்பந்தபட்டவர்கள் மீது அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமா? இது அதிகாரப்பூர்வமான தகவல்தான் என்று தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை தொடர்ந்து செய்தி யாளர்களும், ஊடகங்களும் அமைச்சர் ஆ.இராசா மீது பாய்ந்து அவரை பலிகடா ஆக்க வேண்டும் என்று முயற்சிப்பதற்கு என்ன பின்னணி? எப்படிப்பட்ட வட்டாரங்கள் இதில் மிகப்பெரிய அளவிற்கு பணச்செலவு உள்பட செய்து இதனை தொடர்ந்து செய்கிறார்கள் என்பதனை உடனடியாக ஆராய வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். சம்பந்தபட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய முயற்சிக்காமல் ராசாவைப் பற்றியே கேள்வி கேட்பதும்,பதில் சொல்வதும் தேவையற்ற சர்ச்சைகள் அல்லவா?
- கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக