சனி, 27 ஆகஸ்ட், 2011

இந்தி எதிர்ப்புக்கு முதற்பலி!


வீரன் நடராஜன் இறுதிச் சடங்கு 5-12-1938இல் இந்தி எதிர்ப்பில் கலந்து இந்து தியாலாஜிகல் பள்ளியின் முன் மறியல் செய்து நீதிபதி கனம் அப்பாஸ் அலியால் தண்டிக்கப்பட்ட (தண்டனை காலம் 6-மாதம். அபராதம் ரூ.50 கட்டத்தவறினால் ஆறுவாரம்) சென்னை 11ஆம் டிவிஷன் பண்ணைக் கார ஆண்டியப்பன் தெரு 2/2 நெ. இல்லத்தில் இருக்கும் ஆதிதிராவிட தோழர் லட்சுமணன் அவர்களின் ஒரே குமாரனாகிய தமிழ் வீர இளங்காளை எல். நடராஜன் சென்னைச் சிறையில் பலநாள் நோய்வாய்ப்பட்டிருந்து, சிறை ஆஸ்பத்திரி யில் குணம் காணாமல் 30-12-1938இல் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு நேற்று 15-01-1939 தேதி பகல் சுமார் 2.45 மணிக்கு உயிர் நீத்தார்.

உடல்நிலை, தன் குடும்ப நிலை முதலியவைகளையொன்றும் கருதாமல், மன்னிப்புக் கேட்க மறுத்தும் சிறைக் கைதியாகவே இருந்து, தாய்மொழியாம் தமிழ் மொழிக்காகவே உலகோர் தெரிய உயிர் நீத்த தீரனின் பிரேதத்தை மாலை 5 மணிக்குச் செட்டிநாட்டு குமாரராஜா முத் தையா செட்டியார் அவர்களின் விருப்பப் படி ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து காரில் வைத்து கருப்புக்கொடிகளுடன் ஒரு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.

இன்று (16-1-1939) காலை 9 மணிக்குப் பிரேதம் புட்பப்பல்லக்கில் வைக்கப்பட்டு தங்கசாலை வீதி வழியாகப் புறப்பட்ட சமயத்தில் பத்தாயிரம் நபர் களுக்கு மேல் சவஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தெருவின் இருமருங்கிலும், மாடிகளின் மேலும் ஆண்கள், பெண்கள் கூடி ஊர்வலக் காட்சியைக் கவனித்தனர். பிரேத ஊர்வலம் புறப்படும்போது போலீசா ரால் நல்லவிதமான பந்தோபஸ்துகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் பத்தாயிரம் பேர்களில் அய்ந்தாயிரம் பேர்களுக்கு மேலிட்ட மக்கள் ஒவ்வொரு வரும் கையில் கருப்புக் கொடிகள் தாங்கிச் சென்றனர். தாய்மார்களும், தலைவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பலர் வழிநெடுக ஊர்வலத்தை நிறுத்தி, பிரேதத்திற்கு மலர்மாலைகள் சூட்டினர். ஊர்வலம் அரைமைல் நீளத்திற்கு மேல் அமைதியாகவும், இந்தி எதிர்ப்பு வாக் கியங்களை முழங்கிக்கொண்டும் பகல் 11.30 மணிக்கு மயானத்தை அடைந்தது. வழிநெடுக இருமருங்கிலும் நின்ற மக்கள் கண்ணீர் வடித்தனர்.

பிரேத ஊர்வலம் மயானம் அடைந்ததும் கார்ப்பரேஷன் அங்கத்தினர் தோழர் ஆல்பர்ட் ஜேசுதாசன் தலைமையில் அனுதாபக் கூட்டம் நடைபெற்றது. தொண் டரின் மன உறுதியைக் குறித்தும், காங் கிரஸ்காரர்கள் போக்கைக் கண்டித்தும் தோழர்கள் அண்ணாதுரை, பொன்னம் பலனார், காஞ்சி பரவஸ்து ராஜகோபலாச்சாரியார், வேலூர் அண்ணல் தங்கோ, டாக்டர் தர்மாம்பாள், நாராயணியம்மை முதலியவர்கள் பேசினார்கள்.
- குடிஅரசு, 22.1.193

புதன், 6 ஜூலை, 2011

பார்ப்பனர் - தமிழர்களா?



பார்ப்பனர்கள் தமிழர்களா என்னும் விஷயமாய் தமிழ்நாட்டில் ஒரு பெரிய கேள்வி எழுந்து இதுபோது எங்கு பார்த்தாலும் அதே பேச்சாக இருந்து வருகிறது. இதைப்பற்றி ஏதாவது சிறிதாவது ஆராய்ச்சி செய்வதோ அல்லது அபிப்பிராயம் தெரிவிப்பதோ என்னும் காரியத்தை செய்ய வேண்டுமானால் முதலில் பார்ப்பனர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறோம் என்பதை விளக்கிக் கொள்ளவேண்டும். அதன் பிறகே பார்ப்பனர்கள் தமிழர்களா என்பதைப் பற்றி பேசுவது பயனளிக்கத் தக்கதாகும்.
ஆகவே பார்ப்பனர்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோம் என்பதை விளக்குவோம். நாம் இப்போது பார்ப்பனர்கள்  என்று குறிப்பிடுவதானது யார் யார் தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்களோ, யார் யாரை தங்களை வருணாசிரம தரும முறைப்படி முதல் ஜாதியார், மேலான ஜாதியார் என்றும் மற்றவர்களைத் தங்களுக்கு கீழ்ஜாதியார் என்றும் கருதுகிறார்களோ, யார் யார் தங்களை ஆரிய வேத சாஸ்திர முறைப்படி உயர்ந்த ஜாதியாய் கருதிக் கொண்டு மற்ற ஜாதியாருடன் உண்பன தொடுவன முதலாகிய காரியங்கள் செய்யக் கூடாதென்றும் அந்தப்படி செய்வது தோஷமான காரியமென்றும் கருதுகிறார்களோ, யார் யார் தங்களது நடை, உடை, பாவனை முதலியவைகளில் மற்ற ஜாதியர்களைவிட மாறுபட்டவர்களாய் இருப்பதோடு அவைகள் (அம்மாறுபாடுகள்) தங்களுக்கு மாத்திரம் உரியனவே ஒழிய மற்ற எவ்வகுப்பாருக்கும் உரியவல்ல என்று கருதுகிறார்களோ, யார் யாருக்கு சொந்த ஊர் என்பதொன்று இல்லாமல் தொழிலுக்கும், வாழ்வுக்கும் சென்ற இடங்களையே தங்களது இடமாகக் கொண்டு நாடெங்கும் திரிந்து வாழ்பவர்களாக இருக்கிறார்களோ, யார் யார் தமிழ் பாஷையை இழிவான பாஷை என்றும், தமிழைவிட உயர்ந்த பாஷை வேறு ஒரு பாஷை உண்டு என்றும் அதுதான் தேவ பாஷை, மற்றது மிலேச்ச பாஷை என்றும் கருதுகிறார்களோ, யார் யார் தாங்கள் வைதிக காரியத்தில் ஈடுபட்டு இருக்கும் போது தமிழ் பேசுவது தோஷமான காரியமென்று கருதுகிறார்களோ, யார் யார் தங்களுடைய முன்னோர்களும் கோத்திரத் தலைவர்களும் தமிழர்கள் அல்லவென்றும் அவர்கள் பேசிய பாஷை தமிழ் அல்லவென்றும் அவர்களது சரித்திரங்கள் தமிழில் இல்லை என்றும் கருதிக் கொண்டிருக்கிறார்களோ,  யார் யாருடைய சமய மூல ஆதாரங்கள் தமிழில் இல்லை வேறு பாஷையில்தான் இருக்கின்றன என்றும் கருதிக் கொண்டிருக்கிறார்களோ இவர்கள் எல்லோருமே தமிழை தங்கள் தாய் பாஷையாகக் கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும்கூட பார்ப்பனர்களே யாகும். ஆகவே, இப்படிப்பட்ட பார்ப்பனர்கள் தமிழர்களாவார்களா என்பதுதான் இவ்வியாசத்தின் தலைப்பின் அர்த்தமாகும்.
இந்த எல்லைக்குள் வரும் பார்ப்பனர்கள் தங்கள் வாழ்க்கை அவசியத்தின் பொருட்டு தமிழ்நாட்டில் குடியேறிய காரணம் கொண்டு தமிழ் பேசுபவர்கள். ஆந்திர நாட்டில் குடியேறிய காரணத்தின் பொருட்டு தெலுங்கு பேசுவார்கள். இதுபோலவே வங்காளத்திலும், குஜராத்திலும், சிந்துவிலும், காஷ்மீரத்திலும், ஒரிஸாவிலும் குடியேறிய காரணத்தின் பொருட்டு அந்த அந்த நாட்டு பாஷையே பேசுகிறார்கள்.
ஆதலால் அந்தந்த நாட்டில் அந்தந்த நாட்டு பாஷையை பேசுகின்ற பார்ப்பன மக்கள் எல்லோரும் அந்தந்த நாட்டார் என்கிற உரி கொண்டாடவே அந்தந்த நாட்டார் என்கின்ற பட்டிகையில் சேர்க்கவோ தகுதியற்றவர்களேயாவார்கள்.
இந்த முறையிலேயே தமிழ்நாட்டில் உள்ள இந்த மாதிரி பார்ப்பனர்கள் தமிழர்களா என்பதை ஆராய்கிறோம்.
பார்ப்பனர்களில் ஒரு சாரார் வெகுநாள்களுக்கு முன்னாலேயே இந்த நாட்டுக்குக் குடி வந்திருந்தாலும் இந்த நாட்டிலேயே நிலையாக வாழ்பவர்களாகனாலும் இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் எல்லோரையும் விட தாங்கள் மேலானவர்கள் என்று பிரித்துக் காட்டி தனித்து நிற்க வகை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த பார்ப்பனர்கள் தமிழ் மொழியை தங்களது வாழ்க்கை வழிக்காகவும், வசதிக்கு ஆகவும் பேசுகிறவர்களே ஒழிய. அம்மொழியில் உள்ள அன்புக்காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்னவென்றால் இந்த பார்ப்பனர்கள் தங்களுடைய வைதிக காரியங்களிலும் தேவாதி  முறை பிரார்த்தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.
இந்த பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வடமொழி)யை மேலாக எண்ணுவதோடு அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாய் முயற்சிப்பவர்கள்.
இந்த பார்ப்பனர்கள் தங்களுடைய சமய, ஒழுக்க ஆதாரங்கள் தமிழ் மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக்கொண்டு அதன்படியே பெரிதும் ஒழுங்குபவர்கள்.
இந்த பார்ப்பனர்களுக்கும் பழந்தமிழ் மக்களுக்கும் வாழ்க்கை ஒற்றுமை இல்லை.
இந்த பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்ற உடன் தமிழ் கலைகளையும், தமிழ் பெரியார்கள் பலரையும் தமிழர்கள் மற்கும்படி செய்து விடுபவர்கள். ஆரிய நாயுடுகளையும் ஆரியப் பெரியார் திருத்தமே பிரபலப்படுத்தி கே.சி. கொண்டு வந்து ....
இந்த பார்ப்பனர்கள் .................................... (சரியாக தெரியவில்லை)
இந்த பார்ப்பனர்கள் பிறப்பு உருவம் தோற்றம் முதலிய அமைப்புகளிலும் தமிழ் மக்களைவிட வேறுபடக் காணப்படுபவர்கள்.
இந்த பார்ப்பனர்கள் தங்களுடைய பிறப்பு அமைப்பு அதாவது Race (ரேஸ்) வேறு (ஆரிய ரேஸ்) என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள்.
ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள இந்த பார்ப்பனர்களுக்கும் தமிழர்களுக்கும் இரு வகுப்பாரும் ஆங்கிலேயர்களால் ஆளப்படுகிறவர்களான பொதுக்குடிகள்  என்று சொல்லக் கூடியதை தவிர வேறு எந்த வகையிலும் ஒற்றுமைப்பட்டவர்கள் அல்ல என்பதோடு இந்த பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமை அற்றவர்கள் என்றும் சொல்லலாம்.
குடிஅரசு - கட்டுரை - 04.06.1939

புதன், 15 ஜூன், 2011

சுவரெழுத்து புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள்

பெரிய புராணம் படிக்காதே!
பெரியாரை மறக்காதே!

ஆரிய மாயையில் மயங்காதே!
அண்ணாவை என்றும் மறவாதே!

தலைவிதியை நம்பாதே!
தலைவர் காமராசரை மறவாதே!

கல்லைக் கண்டால் வணங்காதே!
பல்லைக் காட்டி பிழைக்காதே!

அரச மரத்தை சுற்றாதே!
அரசனாட்சியைப் போற்றாதே!

மடிசார் கட்டாதே!
மடிசஞ்சி ஆகாதே!

பஞ்சாங்கம் பார்க்காதே!
பஞ்சகச்சம் கட்டாதே!

கோமயம் குடிக்காதே!
சிவமயம் சொல்லாதே!

இதிகாசம் படிக்காதே!
மதுகஷாயம் குடிக்காதே!

யாகம் செய்து வீணனாகாதே!
தியாகம் செய்து வீரனாகு!

வறட்டுத் தத்துவம் போற்றாதே!
புரட்டு மகிமை ஏற்காதே!

காவடி எடுத்துத் கூத்தாடாதே!
கபாடி எடுத்துப் பாடி ஆடு!

நீர், தியாகய்யர் கீர்த்தனை பாடாதே!
சர்.தியாகராயர் கீர்த்தியினைப் பண்பாடு!

யாரிடமும் பக்தி செலுத்தாதே!
யாவரிடமும் மரியாதை செலுத்து!

மதஞ்சாதியை மதியாதே!
பாஞ்சாலியைத் துதியாதே!

உன்னை "இந்து" என்று சொல்லாதே!
தன்னை "இழி சாதி" என ஏற்காதே!

ஆண்டவா என்று வானத்தைப் பார்க்காதே!
ஆரியனை சாமிஎன்று மானத்தை இழக்காதே!

கோயிலைச் சுற்றாதே!
புகையிலை குதப்பாதே!

ஆளில்லா வீட்டில் நாயின் தேட்டைக்கு வழி வைக்காதே
அய்யா இல்லாத நாட்டில் ஆரியர் வேட்டைக்கு இடம் கொடாதே!

பல்லி மேலே விழுந்தால் பஞ்சாங்கம் பார்க்காதே!
சோற்றில் விழுந்தால் நஞ்சு அஞ்சாமல் தின்னாதே!

முகம் சிவக்க விவாதிக்கேதே!
அகம் சிலிர்க்கப் போதிப்பாய்!

பொன்னாபரனம் பூணாதே!
பெண்ணடிமை பேணாதே!

குலம் பாராதே!
குணம் பார்!

கோத்திரம் நோக்காதே!
நேத்திரம் நிகர் நேர்த்தி பார்!

சாத்திரம் பாராதே!
சித்திர நிகர் நேர்த்திப் பார்!

சாதியை கேளாதே!
செய்தியைக் கூர்ந்து கேள்!

வரதட்சனை வாங்காதே!
வாழ்வைப் பிரச்சினையாக்காதே!

ஜாதகப் பொருத்தம் தேடாதே!
மனப் பொறுத்தம் நாடு!

சடங்குகள் செய்யாதே!
இடங்குகள் பண்ணாதே!

தாலி கட்டாதே ---- பிறகு
மூளி ஆக்காதே!

மதம் மாறாதே! மனம் மாறு!
மனிதனாகத் தேறு!

பிண வாடையில் வளர்ந்த மதங்களை;
மண மேடையில் வக்கரிக்க விடாதே!

மாற்று! மனித மனதை மாற்று!
போற்று! மனித அறிவைப் போற்று!

சநாதனத்தை அழி!
ஜனநாயகத்தை ஒழி!

வைதீகத்தை வதை!
அய்தீகத்தை சிதை!

மதங்களை அதம் செய்!
மனிதர்களை இதம் செய்!

பொய்மறை சூழ்ச்சியைப் புதை!
மெய் மறை எழுச்சியை உரை!

பிடித்து வைத்தச் சாணி!
சாமி இல்லையென துணி!

அய்யப்பனை காலால் மிதி!
உன்னப்பனை மனதால் மதி!

கடவுளை அடியோடு மற!
மனிதனை அன்போடு நினை!

அகப் புரட்சியே ஆக்கம்!
பிறப் புரட்சிகள் மயக்கம்!
குறுகிய குணத்தை விடு!
முறுகிய கொள்கைப் பற்று!

ஆரியர் செய்திடும் மோசடி!
பெரியார் கருத்துரையா லடி!

குறிப்பு:
சுவரெழுத்து புரட்சியாளர்
சுவரெழுத்து சுப்பையா
சிந்தனைப் பொறிகள்
என்னும் தொகுப்பில் இருந்து.....

வியாழன், 9 ஜூன், 2011

இந்து முன்னணி எழுதிய தினமணி தலையங்கம்

குறிக்கோள் மாறக் கூடாது என்ற தலைப்பில் தினமணி ஏடு இன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள் ளது. எழுதியது இந்து முன்னணி ராமகோபாலனா தினமணி வைத்திநாதய்யரா என்று சந்தேகப்படத் தேவையில்லை. இருவரும் ஆர்.எஸ்.எஸின் முகங்கள்தாம்.

சமச்சீர் கல்விபற்றி இந்து முன்னணி ராமகோ பாலய்யர் ஏற்கெனவே சொன்னவற்றை அப்படியே நகல் எடுத்துத்தான் தலையங்கமாக தினமணியில் தீட்டப் பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி என்ற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவுவாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துக்களைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, வீணாகி விட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி என்று தினமணி தலையங்கம் கூறுகிறது.

சமச்சீர் கல்வி எதிர்க்கப்படுவதற்கான காரணம் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிடவில்லையா? ஆம் பூனைக்குட்டி வெளியில்வந்துவிட்டது. கலைஞர் அவர்கள் தலைசிறந்த படைப்பாளியில்லையா? எழுத்து லகில் அவருக்கென்று தனி சிம்மாசனம் இல்லையா? உரை நடை, கவிதை, சிறுகதை, புதினம், கவிதை என்று எழுத்துத் துறையில் சகல பரிமாணங்களிலும் முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் இல்லையா? செம்மொழி குறித்து அவரால் எழுதப்பட்ட குறிக்கோள் பாடல் ஒன்று இடம் பெற்றது மாபெரும் குற்றமா?

பகுத்தறிவு வாதம் என்ற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துக் களைத் திணிப்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாதாம்.

பகுத்தறிவு வாதம் என்பதே அவர்களின் கண்ணோட் டத்தில் குற்றமாகி விடுகிறது. மாணவர்களுக்கு எந்த வகையிலும் பகுத்தறிவுச் சிந்தனைகள் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதிலே ஒரு கூட்டம் எவ்வளவு உன்னிப்பாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

மாணவர்களை கல்விக் கூடங்களுக்கு அனுப்புவதன் நோக்கம் வெறும் நெட்டுருப் போடத்தானா? அவர்களின் பகுத்தறிவை பட்டை தீட்டி கூர்மைப்படுத்துவதுதானே கல்வியின் நோக்கமாக இருக்க முடியும்.

திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றி பாட நூல்களில் இடம் பெற்றுள்ளதாம். அது ஒரு குற்றமாம். திராவிட இயக்கத் தலைவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள்பற்றி தமிழ்நாட்டில் சொல்லிக் கொடுக்காமல் வேறு எங்குப் போய் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம்? இவர்களைப் பற்றி சொல்லிக் கொடுத்தால் பிஞ்சு மனங்களில் விஷ  விதைகள் தூவப்பட்டதாகப் பொருளா?

தந்தை பெரியார் அவர்களின் சமூகப் புரட்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மனிதாபிமானச் சிந்தனை களை அங்கீகரித்து அய்.நா. மன்றமே விருது அளித்து பாராட்டுகிறது. இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுகிறது.

ஆனால் இவர்கள் மட்டும் பெரியார் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்.

பாடத் திட்டங்களில் கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், மகாபாரதம், இராமாயணம் முதலியவை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களின் அந்தரங்கத் துடிதுடிப்பு!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனனுக்கு கடவுள் மோட்சம் கொடுத்ததையெல்லாம் (திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்தபடலம்) சொல்லிக் கொடுக்காமல், பக்தி தனிச் சொத்து; ஒழுக்கம் பொதுச் சொத்து! என்று சொன்ன பெரியாரின் கருத்துக்கள் பாட நூல்களில் இடம் பெறலாமா? அப்படி இடம் பெறுவது பிஞ்சு நெஞ்சங்களில் விஷ விதைகள் தூவுவதாகும் என்கிறது ஒரு கூட்டம். 

இன்றைக்கு தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது அண்ணா பெயரையும், திராவிட இனச் சுட்டுப் பெயரையும் (அண்ணா திமுக) கட்சியிலும் கொடியிலும் தாங்கிக் கொண்டிருக்கக் கூடியதுதானே!

அப்படிப்பட்ட ஆட்சிக்குத் திராவிட இயக்கத் தோற்றம், அதன் சமூக நீதிப் பயணம் பற்றியும் சொல்லிக் கொடுக்க விருப்பம் இல்லை - திராவிட இயக்கத் தலைவர்கள், பற்றி பாடத் திட்டங்களில் கண்டிப்பாக இடம் பெறக் கூடாது என்று கருதுகிறதா என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து விட வேண்டும்.

திராவிட இயக்கம் பேரால்  உள்ள, அண்ணாவின் பெயரால் உள்ள ஒரு கட்சியை அதற்கு எதிரான கொள்கை வழியில் திசை திருப்பித் தாங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தெரிகிறது.

பார்ப்பனர் அல்லாதாரின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி பார்ப்பனீயத்தை வளர்க்கும் வகையில் நடைபோடுகிறது என்ற எண்ணத்தைத்தான் பெரும்பான்மையான மக்களிடத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தும். எச்சரிக்கை!                                                                          ---------------------விடுதலை 09.06.2011

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

சமூகப் புரட்சி சகாப்தம்


சமூகப் புரட்சி சகாப்தம்

தி.மு.க. அரசின் சாதனைகள் என்கிறபோது தனித்தன்மையானது - சமூகப் புரட்சிக் கண்ணோட்டத்தில் அது சாதித்திருப்பவைதான்!
மற்றவர்கள் யாரும் செய்யத் துணியாத அந்தச் சாதனைகளுள் குறிப்பிடத்தக்கவை:

ஜாதி-தீண்டாமை ஒழிப்பு


(1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் சட்டம் - தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் 69 சதவிகித அடிப்படையில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டதாகும். (உச்சநீதிமன்ற முட்டுக்கட்டை காரணமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது).
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகப் பார்ப்பனீயத்தால் ஏற்பட்ட தீண்டாமை - ஜாதிக்கு எதிராக அடிக்கப்பட்ட சாவு மணி இது. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை என்பதில் உள்ள உம் என்ற இழிவு நீக்கப்பட்டது.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு


(2) பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடியும் 60 ஆண்டுகள்தான் தமிழ் ஆண்டுகள் என்ற மூடத்தனம் நீண்ட காலமாக நிலவிவந்தது. நாரதர் என்கிற ஆண் கடவுளுக்கும் கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்று அருவருக்கத்தக்க வகையில் ஆபாசக் கதை புனைந்து வைத்திருந்தனர்.
இதனை எதிர்த்துத் தமிழ் அறிஞர்கள் நீண்ட காலம் குரல் கொடுத்து வந்தனர். திராவிடர் கழகம் வலியுறுத்தியும் வந்தது. கலைஞர் அவர்கள் தமிழ் உணர்வோடும், பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும் பழைய புராணக் குப்பையைத் தூக்கி எறிந்து தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றினார்.

தமிழ் செம்மொழி


(3) தமிழை நீச்சப் பாஷை என்று பார்ப்பனர்கள் கொச்சைப் படுத்தினார்கள். தமிழுக்குச் செம்மொழித் தகுதியை மத்திய அரசிடம் போராடிப் பெற்று தமிழ்மொழி மானம் காத்தவர் முதலமைச்சர் கலைஞர்.
கோவையில் உலகம் வியக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான வகையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்திக் காட்டப்பட்டது (2010 ஜூன் 23 முதல் 27 முடிய).

 மீண்டும் தி.மு.க. ஆட்சியைக் கொண்டுவர வாக்களித்து திமுக கூட்டணியை வாகைசூட வைப்பீர்.

கலைஞரின் கண்ணியமும், ஜெயலலிதாவின் தரக்குறைவும்


கலைஞரின் கண்ணியமும், ஜெயலலிதாவின் தரக்குறைவும்





நமக்கு கிடைத்த இடங்கள் குறைவு - ஆதரித்த இதயங்கள் அதிகம்! ஆகவே, நம்பிக்கையுடன் நமது பயணத்தைத் தொடருவோம்! எங்களின் ஐந்தாண்டுகால அடுக்கான சாதனைகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பரிசாக இந்த முடிவைக் கருதுகிறேன். வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.கழகக் கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் 1 கோடியே 8 இலட்சம் ஆகும். வாக்காளர்களும் சரி- பொதுவாக மக்களும் சரி - நம்மை அறவே புறக்கணித்துவிடவில்லை. நமது அணியின் பிரச்சாரக் கூட்டங்களுக்குப் பெரும் திரளாகக் கூடிய மக்கள் கூட்டத்திற்கும், இந்த வாக்குகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பில்லாமல் போகவில்லை என்பதற்கு இதைவிடத் தக்க சான்று வேறென்ன வேண்டும்? - என்று 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தபோது - அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது - கலைஞர் அவர்கள் 14.5.2001 அன்று தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியிட்ட அறிக்கையின் சில பகுதிகள்தான் மேற்கண்டவை.
இவைகளை இப்போது நினைவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறீர்களா? - அதைப் போலவே 2006இல் தோல்வியைத் தழுவிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொன்ன கருத்து என்ன தெரியுமா? தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது, குரங்கு கையில் பூமாலையைப் போல் ஆகியுள்ளது. கருணாநிதி சொல்வது வேறு;  செய்வது வேறு - எந்தத் திட்டத்தையும் உருப்படியாக நிறைவேற்றப் போவதில்லை!
பெரும்பான்மை இல்லாத தி.மு.க. கூட்டணி அதிக நாட்கள் நீடிக்கப் போவதில்லை! .. தி.மு.க. நிரந்தரமல்ல - அ.தி.மு.க. காலாகாலத்திற்கும் நிரந்தரம் - கழகமும் இருக்கும் - நானும் இருப்பேன். நமக்குப் பின்னடைவு இல்லை - தமிழகத்திற்குத்தான் பின்னடைவு ! நமக்குப் பிரகாசமான எதிர்காலம் உண்டு - கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்... நான் சட்ட சபைக்குச் செல்ல மாட்டேன்! என்றவர் ஜெயலலிதா.

கலைஞரின் ஜனநாயக அரசியல் பண்பாடு எத்தகையது - அதே நேரத்தில் ஜெயலலிதாவின் தரம் எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்வீர் !

சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான்!


சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான்!




பட்டினிச் சாவு ஏற்பட்டது,


 திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஆதிச்சபுரம் என்ற கிராமத்தில். பிரகாஷ் என்கிற பச்சிளம் பாலகன் பட்டினியால் மடிந்த கோரக் கொடுமை நடைபெற்றது.
சட்டப்பேரவையில் திருத்துறைப்பூண்டி தொகுதி உறுப்பினர் தோழர் கோ. பழனிச்சாமி பட்டினிச் சாவு குறித்து எடுத்துரைத்தபோது, ஆவேசமாகக் குறுக்கிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமி சபைக்கு தவறான தகவலைத் திரும்பத் திரும்பச் சொல்லி எனது அரசுக்குக் களங்கம் கற்பிக்க முயல்கிறார். நான் மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமியை கேட்கிறேன், பிரகாஷ் பட்டினியால் செத்தது உண்மை என்று சொன்னால், மற்ற மூன்று குழந்தைகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? என்று கேள்விக்கணை தொடுத்ததை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
குழந்தை இறந்ததற்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தையை இழந்த குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி ஒரு பட்டினிச் சாவு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் குறிப்பிட்டு இருப்பாரேயானால், அவரது பெருந்தன்மையைப் பாராட்டலாம் - போற்றலாம். மாறாக மற்ற மூன்று குழந்தைகள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று கேட்ட மனிதாபிமானமற்ற பேயாட்சியினை இனியும் அனுமதிக்க முடியுமா?
அம்மாபேட்டை வீரையன், சண்முகம் என்று எண்ணற்ற விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடிந்தபோது, அது அனைத்தையும் கிண்டல் செய்த, கேலி செய்த - விலை மதிக்க முடியாத மனித உயிர்களைப்பற்றி கிஞ்சிற்றும் கவலையற்ற, அரக்க குணம் படைத்த ஜெயலலிதாவின் ஆட்சியினை இனியும் அனுமதிக்க முடியாது.
வறட்சியின் கோரக் கொடுமைகள் குறித்து, பட்டினிச் சாவுகள் குறித்து, விவசாயிகள் தற்கொலை குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவரவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி நாளேடுகளுக்கு, செய்தி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது குற்றமா?
ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றியது குற்றமென்று கூறி தோழர் ஆர். நல்லகண்ணு உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள்மீது அவதூறு வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்திற்கு இழுத்தடித்து வரும் ஜனநாயக விரோத ஆட்சியான அ.தி.மு.க.வை அரியணையில் இருந்து இனியும் அகற்றாமல் இருக்க முடியாது - இருக்கக் கூடாது.
- ஜனசக்தி, 19.3.2006
ஜெயலலிதா ஆட்சியை ஒழித்தே தீரவேண்டும் என்று சூளுரைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் இப்பொழுது ஜெ அம்மையாரை ஆட்சிக்குக் கொண்டு வரத் துடியாய்த் துடிக்கிறது. அடையாளம் காண்பீர்!
அம்மையார் மாறவில்லை, அய்யனார்கள்தான் மாறி அணிசேர்ந்துள்ளனர்!  - அது தண்ணிக் காட்டப்பட்டபின்பே!
வாக்காளர்களே, கம்யூனிஸ்டுகள் சொன்ன அந்தப் பேயாட்சியை மீண்டும் வரவழைத்து ஏமாறலாமா? எண்ணுவீர், திமுக கூட்டணிக்கே வாக்களித்து சமதர்ம ஆட்சியை மலரச்செய்வீர்.

சிறுபான்மை மக்களே, திரும்பிப் பாருங்கள் ஜெயலலிதாவை!


சிறுபான்மை மக்களே,
திரும்பிப் பாருங்கள் ஜெயலலிதாவை!


இன்றைக்கு மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் ஆடை உடுத்தியிருக்கும் த.மு.மு.க. தான் சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது (4.7.1999). அதற்கு முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாடு என்னும் பெயர்.
அம்மாநாட்டில் முத்தாய்ப்பாக ஜெயலலிதா என்ன பேசினார்?
இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன்.
நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத்தான் பி.ஜே.பி. ஆட்சியை நானே கவிழ்த்தேன்.
இனி ஒருபோதும் அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் தொடர்பே வைத்துக் கொள்ளாது. என்றென்றும் கடைசி வரைக்கும் - இஸ்லாமிய சமுதாய மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உற்ற தோழியாக, உங்கள் சகோதரியாக இருப்பேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொள்வேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பேன்!
என்று சூளுரைத்தாரே - லட்சோபலட்ச இஸ்லாமியர்கள் முன் வாக்குறுதி அளித்தாரே - அதனைக் காப்பாற்றினாரா ஜெயலலிதா? அடுத்த தேர்தலிலேயே பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டாரே!
அப்படிப்பட்ட ஜெயலலிதாவோடு - அந்தத் த.மு.மு.க. இன்றைய மனிதநேய மக்கள் கட்சி கூட்டு சேர்கிறது என்றால், இதற்குள்ளிருப்பது பதவி வேட்கையோ, வேட்டையோ தவிர சமுதாயப் பாதுகாப்புக் கிடையாது.
சந்தர்ப்பவாதத்தோடு - அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்து வரும் கட்சிகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் பாடம் போதிக்கட்டும்!
சாதனைகளை முன்வைத்து நெஞ்சு நிமிர்த்தி வரும் மதச் சார்பற்ற தி.மு.க. அணிக்கு வெற்றி மாலையைச் சூட்டட்டும்!

பெண்களே, வீராங்கனைகளே!





ஜெயலலிதா பேசியது...


குடும்பம் நடத்த போதுமான அளவுக்கு தனது கணவன் சம்பாதிக்கிறார். குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்கிறார். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தருகிறார் என்கிற எதிர்பார்ப்பும், உரிமையும் மனைவிக்கு உண்டு.
அதேபோல, மனைவியிடமிருந்து சில கடமைகளை கணவன் எதிர்பார்க்கிறார். வீட்டைச் சுத்தமாக வைப்பது, குடும்பச் செலவுகளை நிர்வகிப்பது என்பது மனைவியின் கடமையாகும்.
(நாமக்கல் கூட்டத்தில் ஜெயலலிதா, தினமணி, 17.7.2003)


விஜயகாந்த் பேசியது ...


பெண்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்குக் கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று மகளிர் அணி மாவட்ட செயலாளர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவுரை வழங்கினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிர் அணி நிருவாகிகள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களின் மகளிரணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் 175 பேர் பங்கேற்றனர். மாலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது:
பெண்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் அவர்களின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அதனால் அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்கு நீங்கள் கூடுதல் நேரம் செலவிடவேண்டும். உங்கள் குழந்தைகளின் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு வறுமை ஒழிப்பு உள்ளிட்ட கட்சிக் கொள்கைகள் பெண்களிடம் சென்று சேரும் வகையில் பிரச்சாரம் செய்யுங்கள்.
- இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற மகளிரணி நிருவாகிகளுக்கு தடபுடல் மதிய விருந்து வழங்கப்பட்டது. புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் அசைவ உணவு தவிர்க்கப்பட்டது.
-தினமலர், 23.9.2007
பெண்கள் வேலை வீட்டைக் கூட்டிப் பெருக்குவது என்கிறார் ஜெயலலிதா. பெண்கள் அரசியலில் ஈடுபட்டால் குழப்பம் ஏற்படும். எனவே, வீட்டு வேலைகளைப் பார்க்கட்டும் பெண்கள் என்கிறார் விஜயகாந்த்.

21 ஆம் நூற்றாண்டில் வாழும் பெண்களே, வீராங்கனைகளே!
இந்தப் பிற்போக்குவாதிகள் பொருத்தமாகவே கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
வரும் தேர்தலில் இவர்களை நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா?

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியக் கம்யூனிஸ்ட்



ஈழத்தமிழர் பிரச்சனையில்   இந்தியக் கம்யூனிஸ்ட்






ஈழத் தமிழர்கள்  பிரச்சினைக்கான உண்ணாவிரதப்  போராட்டம் இக்கட்சியால் நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் கலந்து கொள்ளப்படும் என்று அறிவிப்பு வந்தும் கடைசி வரை யாரும் பங்கு கொள்ளவில்லை. ஈழத் தமிழ்ர்ப் பிரச்சினையில் அதிமுக பொதுச் செயலாளரின் தாறுமாறான அறிக்கைக்குப் பதில் கூறத் தயக்கம் - நேரில் சென்று விவாதிப்பேன் என்று சி.பி.அய். மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார். அதன்பின் அதுபற்றி தகவலே இல்லை
.........................................................
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்க மாட்டோம் என்று சொன்னதும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியே !

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்):



ஈழத்தமிழர் பிரச்சனையில்
இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்):



ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை என்று ஜெயலலிதா கூறும் கோஷத்தை நாங்கள் ஏற்கவில்லை. தனியீழம் என்பதற்கும், சுய நிர்ணய உரிமை என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.
இலங்கைப் பிரச்சினையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு.                                    - என்.  வரதராசன் (மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்)  தீக்கதிர் 4.11.2008



மறுபுறத்தை மறுத்து ஒருபுறம் சாய்வான செய்திகளையே தமிழ் மீடியாக்கள் தருவதால், இலங்கை இராணுவத்தின் வெற்றி சில தமிழக அரசியல் தலைவர்களையும், கலை உலகத்தையும், அதிர்ச்சியில் ஆழ்த்தும் விகடன்களும், குமுதங்களும் சித்தரிப்பதுபோல் புலிகள் தமிழ் மக்கள் எழுச்சியின் பிரதிநிதியல்லர். தமிழ் மக்களின் எழுச்சியை வைத்து, அரசியல் தீர்விற்கு முயற்சிக்க மறுத்தது. தற்கொலைப் படையை உருவாக்கித் தனிமைப்பட்டது. புலிகளின் தற்கொலைப் படையின் தாக்குதல் பாமரர்களையும், குழந்தைகளையும்கூட உயிர்ப் பலி வாங்கியதால் அது பின்னடைய நேரிட்டது. அது மீதமிருக்கிற தமிழ்க் குழந்தைகளை மனித குண்டுகளாக்கி மீதமிருக்கிற தமிழ்க் குழந்தைகளை கொல்லலாம்.ஆனால் தீர்வு தூரவே போகும். உலக மக்களின் வெறுப்பையும், இலங்கை இராணுவத்திற்கு மன உறுதியையும் உருவாக்கும்
(தீக்கதிர் 19.11.2008)

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் - அம்மாவின் அருள்வாக்கு!


அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் - அம்மாவின் அருள்வாக்கு!







கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?
ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள்  கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், இன்று இலங் கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல்  விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- ஜெ. ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர். 18.1.2009)
இலங்கை ராஜபக்கேவின் உடன்பிறந்த சகோதரியாக அல்லவா ஜெயலலிதா பேசுகிறார்? ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை சகஜம் என்ற சொல்லால் நியாயப்படுத்துகிறாரே - இவருடன் கூட்டு சேருவோர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்பவர்களா - இல்லையா? சண்டை நடைபெறும்போது அப்பாவி மக்கள் தாக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது - கருணாஅம்மன் (ஜூனியர் விகடன் பேட்டி 1.2.2009)
போரில் பொது மக்களின் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை இப்படி கூறியிருப்பவர் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
(ஈழச்சுதந்திரன் நவம்பர் 2008 பக்கம் 15)
இதையேதான் இங்குள்ள ஜெயலலிதாவும் கூறுகிறார்.
அப்படியென்றால் ஜெயலலிதா யார்? கருணாவைத் துரோகி என்று கூறுவோர், அதே குரலை எதிரொலிக்கும் ஜெயலலிதாவை என்ன பெயரிட்டு அழைக்க வேண்டும்? தமிழர்களே அடையாளம் காண்பீர்!

மாவீரன் பிரபாகரன்பற்றி சட்டமன்றத்திலேயே ஜெ கூறியது என்ன?


மாவீரன் பிரபாகரன்பற்றி சட்டமன்றத்திலேயே ஜெ கூறியது என்ன?


16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:
நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான L.T.T.E.-யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். 20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும், பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந் தேன். அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களின் அரசு, இது குறித்து நடவடிக்கை எடுத்து, 1995-இல் - Interpol-International Criminal Police Commission அமைப்பின் வாயிலாக பிரபாகரனைக் கைது செய்ய Red Corner Notice  வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம், Prevention of Terrorism Act, 2002-இன்கீழ் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து இந்திய மக்களை நிம்மதியடையச் செய்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பினால், அண்மைக் காலங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் மௌனம் காத்து வருவது எங்களுக்குக் கவலை அளிக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் திரு. ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.  இவ்வாறு சட்டப் பேரவையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா.
---------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு நான் தமிழக முதலமைச்சராக பொறுப்பெற்ற பிறகு, மத்திய அரசை வலியுறுத்தினேன். என்னுடைய பெரு முயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் மீதான தடை இன்று வரை தொடருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக வி. பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார் (நமது எம்.ஜி.ஆர். 23.10.2008 பக்கம் 1). (மதிமுக பொதுக்குழுவில் (9.4.2009) விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளார்களே - இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? விடுதலைப்புலிகள் இயக்கம் என்னால்தான் தடை செய்யப்பட்டது என்று கித்தாப்புப் பேசும் அம்மையாரிடம் அல்லவா  கூட்டு சேர்ந்துள்ளனர்?)
----------------------------------------------------
தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்ற அசட்டுத் தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளை பேச ஆரம்பித்து விட்டனர். Pota இல்லாவிட்டாலும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தற்போதுள்ள சட்ட விரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி திமுக அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன
- ஜெயலலிதா அறிக்கை (நமது எம்.ஜி.ஆர். ஏடு 23.10.2008)
இதன் மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?
கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது, பேரணி நடத்த முடிகிறது, போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல் தானா? உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறை யிருந்தால் விரோதியை நண்பராகவும் நண்பரை விரோதியாகவும் கருதுவார்களா?
இந்தியா தலையிடக் கூடாதாம்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது.
- ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)
போரை நிறுத்த வேண்டும் என்பதன்மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)
ஈழப் போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளும் கூறுகின்றன. ஜெயலலிதாவோ என்ன சொல் லுகிறார்? அப்படி தலையிட்டால், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் என்கிறார். இந்த ஜெயலலிதாவுடன் தான் இவர்கள் கூட்டாம் -குழம்பாம் - பொரியலாம் - ரசமாம் - துவையலாம் - குருமாவாம்! தமிழர்களே, புரிந்து கொள்வீர்!

வெள்ளி, 21 ஜனவரி, 2011

டவுட் தனபாலு

தினமலர் செவ்வாயன்று ஒரு டவுட் தனபாலைப் பேச வைத்தது. நேற்றும் பேச வைத்துள்ளது. இரண்டுமே கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களைப் பற்றிதான்  -சுற்றிதான்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை, பெரும் பாலும் வீட்டுக்கு வீடு சாமிகளும், கடவுள்களுக்கு கோவில்களும் உள்ளன. திருவிழாக்களுக்குப் பஞ்ச மில்லை. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது, குறிப்பிட்ட ஊர்களில் பக்தி வியாபாரம், கடவுளின் பெயரால் சுரண்டல், பிசின்ஸ் செழிப்பாக நடக்கிறது.

 டவுட் தனபாலு: ஐயாவுக்கு அதுல என்ன வருத்தமோ...! திரா விடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகப் பொதுக் கூட்டங்கள்ல உண்டி யல் வசூல், துண்டு வசூல் நடத்தியும் ஒண்ணும் தேற மாட்டேங்குது.. கோவில்கள்ல மட்டும் கோடி கோடியா நிறையதேங்கிற வயித்தெரிச்சலோ..!

இதுதான் தினமலரின் டவுட் - கப்சா.

தி.க.வும், தி.மு.க.வும் உண்டி யல் வசூல் பண்ணுவது கூட்டம் நடத்துவது என்பது மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யத்தான். அந்தப் பிரச்சாரங்கள்தான், சிதம்பரம் கோயில் நிருவாகத்திலிருந்து ஆதிக் கத்திலிருந்து தீட்சதர்ப் பார்ப்பனர் களை வெளியேற்றியது.

பார்ப்பனச் சுரண்டல்களை சந்தி சிரிக்க வைத்துக் கொண்டும் இருக் கிறது. ஆனால் தினமலரின் டவுட் தனபால் எடுத்துக் காட்டியுள்ள - திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டிய அந்தக் கோயில் சமாச் சாரங்கள் என்ன?

சிதம்பரம் கோயில் தீட்சதப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், செலவு ரூ.37 ஆயிரம் மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்திலேயே கூறி னார்களா - இல்லையா?

அதே சிதம்பரம் கோயில், திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ள நிலையில் அக்கோயிலின் உண்டி யல் வசூல் மட்டும் என்ன தெரியுமா? 15 மாதங்களுக்கான வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய். அப்படியென்றால் எத்தனை நூற்றாண்டு காலமாக எவ்வளவுக் கொள்ளை அடித்திருக்கும் - இந்தத் தீட்சதப் பார்ப்பனக் கூட்டம்?

அது மட்டுமல்ல; இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் சென்று விட்ட நிலையில் கோயிலில் உள்ள உண்டியல்களில் நெய்யை ஊற்றி ரூபாய் நோட்டுகளை நாசப்படுத்தும் கைங்கரியத்தையும் செய்தவர்கள் இதே தீட்சதர்ப் பார்ப்பனர்கள் தாம்.

தங்களுக்குப் பயன்படாதது எதுவாக இருந்தாலும் அது நாசமாகப் போக வேண்டும் என்பதுதானே பார்ப்பனர்களின் கல்யாணக் குணங்களும், பரந்த உள்ளமும்!

பக்தி வியாபாரம் கடவுளின் பெயரால் சுரண்டல் பிசினஸ் செழிப்பாக நடக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை காலங் கடந்தாவது இப்பொழுதாவது தினமலர் அய்யருக்கு டவுட் தனபாலுக்குப் புரிந்தால் சரி!\
- கருஞ்சட்டை