கலைஞரின் கண்ணியமும், ஜெயலலிதாவின் தரக்குறைவும்
நமக்கு கிடைத்த இடங்கள் குறைவு - ஆதரித்த இதயங்கள் அதிகம்! ஆகவே, நம்பிக்கையுடன் நமது பயணத்தைத் தொடருவோம்! எங்களின் ஐந்தாண்டுகால அடுக்கான சாதனைகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பரிசாக இந்த முடிவைக் கருதுகிறேன். வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.கழகக் கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் 1 கோடியே 8 இலட்சம் ஆகும். வாக்காளர்களும் சரி- பொதுவாக மக்களும் சரி - நம்மை அறவே புறக்கணித்துவிடவில்லை. நமது அணியின் பிரச்சாரக் கூட்டங்களுக்குப் பெரும் திரளாகக் கூடிய மக்கள் கூட்டத்திற்கும், இந்த வாக்குகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பில்லாமல் போகவில்லை என்பதற்கு இதைவிடத் தக்க சான்று வேறென்ன வேண்டும்? - என்று 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தபோது - அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது - கலைஞர் அவர்கள் 14.5.2001 அன்று தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியிட்ட அறிக்கையின் சில பகுதிகள்தான் மேற்கண்டவை.
இவைகளை இப்போது நினைவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறீர்களா? - அதைப் போலவே 2006இல் தோல்வியைத் தழுவிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொன்ன கருத்து என்ன தெரியுமா? தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது, குரங்கு கையில் பூமாலையைப் போல் ஆகியுள்ளது. கருணாநிதி சொல்வது வேறு; செய்வது வேறு - எந்தத் திட்டத்தையும் உருப்படியாக நிறைவேற்றப் போவதில்லை!
பெரும்பான்மை இல்லாத தி.மு.க. கூட்டணி அதிக நாட்கள் நீடிக்கப் போவதில்லை! .. தி.மு.க. நிரந்தரமல்ல - அ.தி.மு.க. காலாகாலத்திற்கும் நிரந்தரம் - கழகமும் இருக்கும் - நானும் இருப்பேன். நமக்குப் பின்னடைவு இல்லை - தமிழகத்திற்குத்தான் பின்னடைவு ! நமக்குப் பிரகாசமான எதிர்காலம் உண்டு - கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்... நான் சட்ட சபைக்குச் செல்ல மாட்டேன்! என்றவர் ஜெயலலிதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக