சமூகப் புரட்சி சகாப்தம்
மற்றவர்கள் யாரும் செய்யத் துணியாத அந்தச் சாதனைகளுள் குறிப்பிடத்தக்கவை:
ஜாதி-தீண்டாமை ஒழிப்பு
(1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் சட்டம் - தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் 69 சதவிகித அடிப்படையில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டதாகும். (உச்சநீதிமன்ற முட்டுக்கட்டை காரணமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது).
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகப் பார்ப்பனீயத்தால் ஏற்பட்ட தீண்டாமை - ஜாதிக்கு எதிராக அடிக்கப்பட்ட சாவு மணி இது. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை என்பதில் உள்ள உம் என்ற இழிவு நீக்கப்பட்டது.
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
(2) பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடியும் 60 ஆண்டுகள்தான் தமிழ் ஆண்டுகள் என்ற மூடத்தனம் நீண்ட காலமாக நிலவிவந்தது. நாரதர் என்கிற ஆண் கடவுளுக்கும் கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்று அருவருக்கத்தக்க வகையில் ஆபாசக் கதை புனைந்து வைத்திருந்தனர்.
இதனை எதிர்த்துத் தமிழ் அறிஞர்கள் நீண்ட காலம் குரல் கொடுத்து வந்தனர். திராவிடர் கழகம் வலியுறுத்தியும் வந்தது. கலைஞர் அவர்கள் தமிழ் உணர்வோடும், பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும் பழைய புராணக் குப்பையைத் தூக்கி எறிந்து தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றினார்.
தமிழ் செம்மொழி
(3) தமிழை நீச்சப் பாஷை என்று பார்ப்பனர்கள் கொச்சைப் படுத்தினார்கள். தமிழுக்குச் செம்மொழித் தகுதியை மத்திய அரசிடம் போராடிப் பெற்று தமிழ்மொழி மானம் காத்தவர் முதலமைச்சர் கலைஞர்.
கோவையில் உலகம் வியக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான வகையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்திக் காட்டப்பட்டது (2010 ஜூன் 23 முதல் 27 முடிய).
மீண்டும் தி.மு.க. ஆட்சியைக் கொண்டுவர வாக்களித்து திமுக கூட்டணியை வாகைசூட வைப்பீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக