செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் - அம்மாவின் அருள்வாக்கு!


அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் - அம்மாவின் அருள்வாக்கு!







கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?
ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள்  கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், இன்று இலங் கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல்  விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- ஜெ. ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர். 18.1.2009)
இலங்கை ராஜபக்கேவின் உடன்பிறந்த சகோதரியாக அல்லவா ஜெயலலிதா பேசுகிறார்? ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை சகஜம் என்ற சொல்லால் நியாயப்படுத்துகிறாரே - இவருடன் கூட்டு சேருவோர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்பவர்களா - இல்லையா? சண்டை நடைபெறும்போது அப்பாவி மக்கள் தாக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது - கருணாஅம்மன் (ஜூனியர் விகடன் பேட்டி 1.2.2009)
போரில் பொது மக்களின் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை இப்படி கூறியிருப்பவர் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
(ஈழச்சுதந்திரன் நவம்பர் 2008 பக்கம் 15)
இதையேதான் இங்குள்ள ஜெயலலிதாவும் கூறுகிறார்.
அப்படியென்றால் ஜெயலலிதா யார்? கருணாவைத் துரோகி என்று கூறுவோர், அதே குரலை எதிரொலிக்கும் ஜெயலலிதாவை என்ன பெயரிட்டு அழைக்க வேண்டும்? தமிழர்களே அடையாளம் காண்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக