செவ்வாய், 5 ஏப்ரல், 2011

சிறுபான்மை மக்களே, திரும்பிப் பாருங்கள் ஜெயலலிதாவை!


சிறுபான்மை மக்களே,
திரும்பிப் பாருங்கள் ஜெயலலிதாவை!


இன்றைக்கு மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் ஆடை உடுத்தியிருக்கும் த.மு.மு.க. தான் சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது (4.7.1999). அதற்கு முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாடு என்னும் பெயர்.
அம்மாநாட்டில் முத்தாய்ப்பாக ஜெயலலிதா என்ன பேசினார்?
இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன்.
நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத்தான் பி.ஜே.பி. ஆட்சியை நானே கவிழ்த்தேன்.
இனி ஒருபோதும் அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் தொடர்பே வைத்துக் கொள்ளாது. என்றென்றும் கடைசி வரைக்கும் - இஸ்லாமிய சமுதாய மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உற்ற தோழியாக, உங்கள் சகோதரியாக இருப்பேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொள்வேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பேன்!
என்று சூளுரைத்தாரே - லட்சோபலட்ச இஸ்லாமியர்கள் முன் வாக்குறுதி அளித்தாரே - அதனைக் காப்பாற்றினாரா ஜெயலலிதா? அடுத்த தேர்தலிலேயே பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டாரே!
அப்படிப்பட்ட ஜெயலலிதாவோடு - அந்தத் த.மு.மு.க. இன்றைய மனிதநேய மக்கள் கட்சி கூட்டு சேர்கிறது என்றால், இதற்குள்ளிருப்பது பதவி வேட்கையோ, வேட்டையோ தவிர சமுதாயப் பாதுகாப்புக் கிடையாது.
சந்தர்ப்பவாதத்தோடு - அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்து வரும் கட்சிகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் பாடம் போதிக்கட்டும்!
சாதனைகளை முன்வைத்து நெஞ்சு நிமிர்த்தி வரும் மதச் சார்பற்ற தி.மு.க. அணிக்கு வெற்றி மாலையைச் சூட்டட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக