செவ்வாய், 5 ஏப்ரல், 2011

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்):



ஈழத்தமிழர் பிரச்சனையில்
இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்):



ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை என்று ஜெயலலிதா கூறும் கோஷத்தை நாங்கள் ஏற்கவில்லை. தனியீழம் என்பதற்கும், சுய நிர்ணய உரிமை என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.
இலங்கைப் பிரச்சினையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு.                                    - என்.  வரதராசன் (மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்)  தீக்கதிர் 4.11.2008



மறுபுறத்தை மறுத்து ஒருபுறம் சாய்வான செய்திகளையே தமிழ் மீடியாக்கள் தருவதால், இலங்கை இராணுவத்தின் வெற்றி சில தமிழக அரசியல் தலைவர்களையும், கலை உலகத்தையும், அதிர்ச்சியில் ஆழ்த்தும் விகடன்களும், குமுதங்களும் சித்தரிப்பதுபோல் புலிகள் தமிழ் மக்கள் எழுச்சியின் பிரதிநிதியல்லர். தமிழ் மக்களின் எழுச்சியை வைத்து, அரசியல் தீர்விற்கு முயற்சிக்க மறுத்தது. தற்கொலைப் படையை உருவாக்கித் தனிமைப்பட்டது. புலிகளின் தற்கொலைப் படையின் தாக்குதல் பாமரர்களையும், குழந்தைகளையும்கூட உயிர்ப் பலி வாங்கியதால் அது பின்னடைய நேரிட்டது. அது மீதமிருக்கிற தமிழ்க் குழந்தைகளை மனித குண்டுகளாக்கி மீதமிருக்கிற தமிழ்க் குழந்தைகளை கொல்லலாம்.ஆனால் தீர்வு தூரவே போகும். உலக மக்களின் வெறுப்பையும், இலங்கை இராணுவத்திற்கு மன உறுதியையும் உருவாக்கும்
(தீக்கதிர் 19.11.2008)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக