செவ்வாய், 5 ஏப்ரல், 2011

பெண்களே, வீராங்கனைகளே!





ஜெயலலிதா பேசியது...


குடும்பம் நடத்த போதுமான அளவுக்கு தனது கணவன் சம்பாதிக்கிறார். குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்கிறார். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தருகிறார் என்கிற எதிர்பார்ப்பும், உரிமையும் மனைவிக்கு உண்டு.
அதேபோல, மனைவியிடமிருந்து சில கடமைகளை கணவன் எதிர்பார்க்கிறார். வீட்டைச் சுத்தமாக வைப்பது, குடும்பச் செலவுகளை நிர்வகிப்பது என்பது மனைவியின் கடமையாகும்.
(நாமக்கல் கூட்டத்தில் ஜெயலலிதா, தினமணி, 17.7.2003)


விஜயகாந்த் பேசியது ...


பெண்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்குக் கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று மகளிர் அணி மாவட்ட செயலாளர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவுரை வழங்கினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிர் அணி நிருவாகிகள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களின் மகளிரணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் 175 பேர் பங்கேற்றனர். மாலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது:
பெண்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் அவர்களின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அதனால் அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்கு நீங்கள் கூடுதல் நேரம் செலவிடவேண்டும். உங்கள் குழந்தைகளின் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு வறுமை ஒழிப்பு உள்ளிட்ட கட்சிக் கொள்கைகள் பெண்களிடம் சென்று சேரும் வகையில் பிரச்சாரம் செய்யுங்கள்.
- இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற மகளிரணி நிருவாகிகளுக்கு தடபுடல் மதிய விருந்து வழங்கப்பட்டது. புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் அசைவ உணவு தவிர்க்கப்பட்டது.
-தினமலர், 23.9.2007
பெண்கள் வேலை வீட்டைக் கூட்டிப் பெருக்குவது என்கிறார் ஜெயலலிதா. பெண்கள் அரசியலில் ஈடுபட்டால் குழப்பம் ஏற்படும். எனவே, வீட்டு வேலைகளைப் பார்க்கட்டும் பெண்கள் என்கிறார் விஜயகாந்த்.

21 ஆம் நூற்றாண்டில் வாழும் பெண்களே, வீராங்கனைகளே!
இந்தப் பிற்போக்குவாதிகள் பொருத்தமாகவே கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
வரும் தேர்தலில் இவர்களை நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக